Monday, April 12, 2010

அல்குர்ஆன் இற‌க்கி அருளப்பட்டதா? படைக்கப்பட்டதா?

அழ் ஹாபிழ் அபூ அஸ்பாக் அல் அதரி
abuashfaqalathary@gmail.com

”மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.’ (அல் குர்ஆன் 4:174)

மனித குலத்தின் ஈருலக வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக் குர்ஆன் ஜாஹிலிய்யா காலம் தொட்டு இன்றைய நவீனகாலம்வரை ஏற்படுத்திய மாற்றங்களையும், சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்றுவிடும். மனித வரலாற்றில் சாதனை படைத்த சாதனையாளர்களின் பின்னணியில் தாக்கம் செலுத்துவது அல்குர்ஆனின் அறிவூட்டல்தான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இத்தகைய புனிதமிகு வேதம் எவ்வாறு இவ்வுலகிற்கு வருகை தந்தது என்பதில் மனித சமூகத்தில் இரு விதமான கோட்பாடுகள்காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம்களாகிய நாம் எதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக இக்கட்டுரை அலசவிருக் கின்றது. இவற்றில் பூரண தெளிவில்லாமல் நாம் வணக்க வழிபாடுகளை மேற்கொள்வது உப்பில்லா பண்டம் குப்பையில் என்ற பழமொழிக்கு ஒத்ததாகத்தான் இருக்கும். அவைகளை பரத்தப்பட்ட புழுதிகளாகவே நாளை மறுமையில் நாம் காண்போம்.

எனவே அல்குர்ஆனை படிப்பதற்கு முன் அதன் வருகை பற்றிய பூரண தெளிவை ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமென கருதுகின்றேன்.

முஸ்லிம்களாகிய நாம், திருமறைக்குர்ஆன், அருள்புரியப்பட்ட மகத்துவமிக்க இரவை தன்னகத்தே கொண்டுள்ள ரமழான் மாத்தில் இறக்கியருளப்பட்டது எனும் நம்பிக்கைகோட்பாட்டில் வாழ்ந்து வருகின்றோம். அன்றைய ஜாஹிலிய சமூகத்திடம் மூட நம்பிக்கைகள், பெண் குழந்தைகளை குழி தோண்டிப் புதைப்பது இளம்பெண்களை ஆடு மாடுகளைப் போன்று நடத்துவது, மதுபாணங்களை அருந்துவது,தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியோடு மகன்சேர்வது, நிர்வாணமாக நின்று கடவுள் ஆராதனைகளை மேற்கொள்வது, இன, மத வேறுபாடுகள் பார்ப்பது போன்ற இன்னும் பல தீய குணங்கள் மேலோங்கிக் காணப்பட்டது.

இத்தகைய இழி நிலைகளை அவதானித்துக் கொண்டிருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவற்றில் தானும் பங்காளியாகிவிடக் கூடாது என்பதற்காக மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிறா’ எனும் குகைக்குச் சென்று இவற்றிற்கான மாற்று வழிகளை சிந்திக்கலானார்கள்.

பல நாட்களுக்கான உணவுகளை தயார்படுத்திக்கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வானத்தையும், பூமியையும் தொட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு பிரமாண்டமான தோற்றத்தில் ஜிப்ரீல் எனும் மலக்கு திடீரென நபிகளாரை கட்டியணைத்து ‘ஓதுவீராக’ எனக் கூறிய போது தமக்கு ஓதத்தெரியாது என நபியவர்கள் சொல்ல மீண்டும் ‘ஓதுவீராக’ எனக்கூற அப்போதும் தெரியாது என பதிலளித்தார்கள். பிறகு நபியவர்களை மிகவும் இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டு அல் குர்ஆனின் 96வது அத்தி யாயத்தில் இடம் பெறும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காண்பித்தார்கள்.

நபியவர்கள் அதிர்ச்சியுற்று அச்சம் கொண்டவர்களாக தனது மனைவி ஹதீஜாவிடம் வந்து விடயத்தைக் கூறினார்கள். ‘இறைவன் நிச்சயமாக உங்களை இழிவு படுத்தமாட்டான், நீங்கள் உறவுகளை சேர்ந்து வாழுகின்றீர்கள், ஏழைகளுக்கு வாரி வழங்கு கின்றீர்கள், மக்களுக்கு உதவுகின்றீர்கள். எனவே, அழ்ழாஹ் உங்களை கைவிடமாட்டான்’ என ஆறுதல் வார்த்தைகளை கூறினார்கள். பிறகு முந்தைய வேதங்களை திறம்பட கற்றறிந்த தனது உறவினர் வரகாவிடம் நபிகளாரை அழைத்துச் சென்று விடயத்தை முறையிட்டார்கள.

அவர் ‘நீர் இறைவனின் தூதராக நியமிக் கப்பட்டுள்ளீர், உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டு வெளியேற்றும் நிலையை நீர் அடைவீர். ஏனெனில் இதுதான் முன்சென்ற இறைத் தூதர்களின் நிலை என்றெல்லாம் ஆறுதல் படுத்தினார்கள்.’ (நூல்: புஹாரி-3)

இவ்வாறே நபிகளாருக்கு இறைச் செய்தி கொடுக்கப் பட்டது. இவ்வாறு ஆரம்பித்த வஹி 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கி அருளப்பட்டது. இந்த வருகையைக் குறித்து அருள்மறை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்ட தாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.’ (அல்குர்ஆன் 1:185).

மற்றுமொரு வசனத்தில் ‘இதனை நாம் அருள் பாலிக்கப்பட்ட இரவில் இறக்கி வைத்துள்ளோம்.’ (அல்குர்ஆன் 44:2). பிறிதொரு வசனத்தில் ‘இதனை (குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இறக்கி அருளி யுள்ளோம்.’ (அல்குர்ஆன் 97:1).

மேற் கூறப்பட்ட வசனங்களை பார்க்கும் போது அல்குர்ஆனின் வருகையில் ஏதோ முரண்பாடு இருப்பது போன்று தோன்றுகிறது. சிலர் அவ்வாறு சித்தரித்தும் உள்ளனர். எனினும் உண்மையில் இவற்றில் எவ்வித முரண்பாடும் கிடையாது.

அல்குர்ஆன் 44:2ல் கூறப்படுகின்ற அருள்பாலிக்கப்பட்ட இரவு என்பது லைலதுல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவு என்பதை அல்குர்ஆன் 97:1ஆம் வசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த மகத்துவமிக்க இரவு ரமழான் மாதத்தில் உள்ளது என்பதை அல்குர்ஆன் 185:1ஆம் வசனம் உணர்த்தி நிற்கின்றது. எனவே இம்மூன்று வசனங்களையும் கூர்ந்து கவனிக்கும் போது ஒன்றுக்கொன்று விளக்கமாக அமைந்துள்ளதே தவிர முரண்பாடுகள் கிடையாது என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அடுத்து மற்றுமொரு சந்தேகமும் எழ வாய்ப்பு உள்ளது. அதாவது ரமழான் மாதத்தில் ‘லைலதுல் கத்ர்’ எனும் இரவில் அருள்மறை இறக்கியருளப்பட்டதென்றால் ஏனைய காலங்களில் இறக்கியருளப்படவில்லையா? 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டது என்பதுதானே இஸ்லாமிய வரலாறு கூறும் உண்மை?

உண்மையில் இது ஒரு நியாயமான கேள்வியாகும். எனினும் அல்குர்ஆனின் வருகை குறித்து உள்ள அடிப்படையில் எமக்கு தெளிவு கிடைக்குமாயின் இச்சந்தேகம் எழ வாய்ப்பே இல்லை. திருமறைக் குர்ஆனுக்கு இரு விதமான வருகைகள் உள்ளன.

நன்றி : http://dharulathar.com

No comments:

Post a Comment