Wednesday, May 19, 2010

நீல நிற இரத்தம் பம்பும் இதயமொன்று…



by:FM அஸ்லம் (ரஜரட்டை மருத்துவபீடம்) aslamaumsa@gmail.com

‘எவர் ஆத்மாவாகிய அதை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர் திட்டமாக வெற்றி பெற்றுவிட்டார்.’ (அல்குர்ஆன் 91:9)


மார்ச் மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை காலை அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டடுள்ள குழந்தைகளை பரிசீலித்துக்கொண்டு செல்லும் போதுஇ 12ம் இலக்கக் கட்டிலில் ஏழு மாதம் நிரம்பிய அழகான பெண் குழந்தையொன்று உழைத்துக் களைத்த மனிதன் உறங்குவது போன்று உறங்கிக்கொண்டிருந்தது. மேலும் குழந்தையின் இரு உதடுகளும் மற்றும் கால்இ கைகளிலுள்ள நகங்களும் நீல நிறச்சாயம் பூசி அலங்கரிக்கப்பட்டிருப்பது போன்று நீல நிறமாக மாறியிருந்தது.

அருகில் இருந்த தாயிடம் குழந்தையின் நோய் பற்றி வினவிய போது கடந்த சில தினங்களாக முன்னரை விட கடுமையாக குழந்தை சோர்வடைந் திருப்பதாகவும் பால் குடிக்க முடியாமல் திணறி அழுவதாகவும் மற்றும் அழும்

போது உடல் முழுவதும் நீல நிறமாக மாறுவதாகவும் கூறியபடி குழந்தையின் தலையணைக்குக்கீழ் இருந்து 2 கொப்பிகளையும் எழுதப்பட்ட சில தாள்களையும் எடுத்து நீட்டி குழந்தைக்கு இதய நோய் இருப்பதாகவும் அதற்காக குழந்தையை இரு மாதத்திற்கு ஒரு முறை கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்குக்காக அழைத்துச் செல்வதாகவும் கடைசியாக சென்ற கிளினிக்கில் குழந்தைக்கிருக்கும் நோயை சத்திர சிகிச்சை செய்து மாத்திரமே குணப்படுத்த முடியும் எனவும் பெரிய வைத்தியர் கூறிவிட்டார் என்று முற்றாக கூறி வார்த்தைகள் வராமல் விம்மலுடன் முடித்தார்.

கருவாக இருந்த காலத்தில் இக்குழந்தையின் இதயம் விருத்தியடையும் போது ஏற்பட்ட ஒரு சிறு விபத்தினால் சாதாரண இதயத்தின் அமைப்பில் நின்றும் வேறுபட்ட பல குறைபாடுகளுடன் கூடிய இவ்விதயத்தினால் இக்குழந்தையின் உயிருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அலசுவதற்கு முன்னர் சாதாரண இதயம் எவ்வாறு ஒழுங்கமைக்கப் பட்டிருக்கிறது மற்றும் அது எவ்வாறு தொழிற்படுகின்றது என்று முதலில் நோக்குவோம்.

சாதாரண ஒரு மனித இதயத்தின் அமைப்பை நோக்கும் போது அது மேற்புறமாக இரண்டு சோனை யறைகளும் கீழ்புறமாக இரண்டு இதயவறைகளுமாக நான்கு அறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இரண்டு சோனையறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புறாத வகையில் சோனையறை பிரிசுவரால் இதயவறைகளும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே பக்கமாக அமைந்துள்ள இதயவறைகளும் சோனையறைகளும் கதவு போன்று திறந்து மூடக்கூடிய வால்பு மூலம் தொடர்புருகின்றன.

வலது சோனையறையினுள் மேற்பெருநாளம் கீழ்பெருநாளம் எனும் இரு பெரிய நாளங்களும் இடது சோனையறையினுள் நான்கு சுவாசப்பை நாளங்களும் திறக்கின்றன. மற்றும் வலது இதயவறையிலிருந்து ஒரு சுவாசப்பை நாடி உதித்து இரண்டாகப் பிரிந்து இரண்டு சுவாசப் பைகளையும் சென்றடைகின்றது. அதேபோல் இடது இதயவறையில் இருந்து தொகுதிப் பெருநாடி எனும் ஒரு பெரிய நாடி உதித்து அதிலிருந்து பல வகையான கிளை நாடிகள் தோன்றி தலை கை கால் உட்பட உடலின் எல்லாப் பாகங்களுக்கும் குருதியை வினியோகிப்பதற்காக சென்றடைகின்றது.

உடலின் மேற்பகுதியால் பயன்படுத்தப்பட்ட ஒட்சிசன் குறைவான நிலையில் உள்ள குருதி மேற்பெருநாளத்தினூடாகவும் உடலின் கீழ்பகுதியால் பயன்படுத்தப்படு ஒட்சிசன் குறைவான நிலையில் உள்ள குருதி கீழ்பெருநாளத்தினூடாகவும் வலது சோனையறையினுள் ஊற்றப்படுகின்றது. பின்னர் வலது சோனையறை சுருங்கும் போது அதற்குள் வந்தடைந்த குருதி முழுவதும் வால்பின் உதவியினூடாக வலது இதயவறைக்குள் மாற்றப்பட்டு பின்னர் வலது இதயவறை சுருங்கும் போது அங்கிருந்து குருதியானது சுவாசப்பை நாடியினூடாக சுவாசப்பைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நாம் சுவாசிப்பதன் மூலம் வளிமண்டலத்திலிருந்து உள்ளெடுக்கப்பட்டு சுவாசப்பையை (நுரையீரலை) அடையும் ஒட்சிசனில் கரைக்கப்பட்டு விளைவாகும் ஒட்சியேற்றப்பட்ட குருதி சுவாசப்பையிலிருந்து நான்கு சுவாசப்பை நாளங்களுடாக இடது சோனையறையை அடைந்து அங்கிருந்ந பின்னர் வால்பினுடாக இடது இதயவறையை அடைகின்றது.

ஒட்சியேற்றப்பட்ட குருதி இடது இதயவறையை வந்தடைந்த பின்னர் அது சுருங்க ஆரம்பித்து சுருங்கும் போது தொகுதிப் பெருநாடியினூடாக அவ் ஒட்சியேற்றப்பட்ட குருதி உடலின் எல்லாப்பாகங்களுக்கும் சென்றடைவதால் உடலில் உள்ள 60 ரில்லியனுக்கும் மேற்பட்ட கலங்களும் இவ் ஒட்சிசனைப் பயன்படுத்தி சக்தியை உருவாக்குவதன் மூலம் எம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.

இதனால் தான் விபத்துக்கள் மற்றும் பல காரணங்களாள் சுயநினைவிழந்து அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சுவாசப் பாதையில் ஏதாவது அடைப்புகள் ஏற்பட்டு சுவாசம் தடைப்படுகின்றதா? மற்றும் சுவாசம் ஒழுங்காக நடைபெறுகின்றதா? என்பனவே முதன்முதலாக பரீட்சிக்கப்படும் அளவுக்கு ஒட்சிசன் தேவையானது உடலுக்கு மிக இன்றியமையாததாகும்.

முளையமானது கருப்பையில் உட்பதிக்கப்பட்டு நான்கு வாரங்களின் பின்னர் நிகழும் மடாதல் எனும் செயற்பாட்டின் மூலம் இதயம் விருத்தியடையத் தொடங்கும். இதன் போது இரண்டு இதயவறைகளையும் பிரித்து உருவாகும் இதயவறைப் பிரிசுவரின் மேற்பகுதி சற்று முன்பின்னாக்கி விலகுவதால் இதயவறைகள் முற்றாக பிரிக்கப்படாமலும் தொகுதிப்பெருநாடி வலது சோனையறைக்குள் உட்செல்லும்.

சுவாசப் பைநாடி சற்று நெருக்கப்பட்டு அதன் விட்டம் குறைவடைந்தும் மற்றும் விட்டம் குறைவடைந்து காணப்படும் நாடியினூடாக குருதியை பம்புவதற்கு அதிக விசையைப் பிரயோகிப்பதற்காக வலது இதயவறை சற்றுத் தடித்தும் பெரிதாகியும் காணப்படும்.

கிரேக்கத்தில் நான்கைக் குறிப்பதற்காக Tetra எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இதனால்தான் சாதாரண இதயத்தில் இருந்தும் வேறுபட்ட மேற்கூறப்பட்ட நான்கு குறைபாட்டைக் கொண்ட இவ்விதயத்திற்கு Tetrology of fallot எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான குறைபாட்டினால் வலது இதயவறையை வந்தடையும் ஒட்சியேற்றப்படாத குருதியின் ஒரு பகுதி வலது இதயவறை சுருங்கும் போது சுவாசப்பைக்குச் சென்று ஒட்சியேற்றப்படாமலேயே வலது இதயவறையினுல் உட்புகுந்து காணப்படும் தொகுதிப் பெருநாடியினூடாக செல்வதனால் ஒட்சிசன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் உடற்கலங்களுக்கு தாகம் தீர்க்க முடியாமல் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

இவ்வாறான ஒட்சிசன் தட்டுப்பாட்டினால் ஏழு மாதமாகியும் இன்னும் சுயமாக இருக்க முடியாதளவுக்கு இக்குழந்தையின் வளர்ச்சி குறைவடைந்திருப்பதுடன் மேலும் இக்குழந்தை வளரும் போது அதிகளவு ஒட்சிசன் தேவைப்படுவதாலும் இத்தேவைக்கேற்ப ஒட்சிசன் வழங்க முடியாமல் இதயம் திணறுவதால் பூப்படைதல் உட்பட குழந்தையின் எல்லா வளர்ச்சி கட்டங்களும் தாமதமாகியே நடைபெறும்.

மற்றும் இவ்வாறான குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது தொடர்ச்சியாக விளையாட முடியாமல் உடல் முழுவதும் நீல நிறமாகி இடைநடுவிலேயே ஓரமாகி ஓய்வெடுத்துக் கொள்ளும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்குழந்தையை முகங்குப்பற படுக்கப் (Knee – Chest position)போடுவதன் மூலம் பகுதியான சிறிதளவு நிவாரணமும் கிடைக்கின்றது.

இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக தொடையிலிருந்து ஒரு நாளம் வெட்டி எடுக்கப்பட்டு அதனால் சுவாசப்பை நாடியும் தொகுதிப் பெருநாடியும் இணைக்கப்பட்டு அவற்றிற்கிடையே தொடர்பு ஏற்படுத்தப் படுகின்றது. இதனால் தொகுதிப் பெருநாடியினூடாக செல்லும் ஒட்சிசன் அகற்றப்பட்ட குருதி சுவாசப்பை நாடியினுல் மாற்றப்பட்டு சுவாசப்பை நாடியினூடாக சுவாசப் பையினுல் எடுக்கப்பட்டு ஒட்சியேற்றி அனுப்பபடும் இச்சத்திர சிகிச்சை Blalock – Taussig Shunt என அழைக்கப்படுகிறது.

பல இலட்சங்கள் செலவு செய்து செய்யப்படும் இச்சத்திர சிகிச்சையின் போது துரதிஷ்டவசமாக இதயத்துடன் மருவிச் செல்லும் நரம்புகள் (Phrenic nerve) இதயச் சுவாசத்துக்கான சமிக்ஞைத் தொகுதி (conducting systerm) என்பன சத்திர சிகிச்சை நிபுணரின் (surgeon) கத்தியில் அகப்படும் போது மரணம் கூட சம்பவிக்கக் கூடும்.

பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளில் பத்துக் குழந்தைகள் இவ்வாறான குறைபாட்டுடன் பிறப்பதாகவும் அந்தப்பத்துக்குள் எம்மையும் உள்ளடக்காமல் எந்தக் குறையுமின்றி வடிவத்தில் அழகாக அமைத்திருந்தும் இன்று நாம் அதை பொறாமை பெருமை தலக்கணம் ஆணவம் போன்றவைகள் குடியிருக்குமிடமாக மாற்றி எம்மிதயத்தை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.

‘அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.’ (அல்குர்ஆன்- 91:9)

‘உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்துகொள்ளுங் கள் அதுதான் இதயம். என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

‘(அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-52)

இறைவன் ஒரு விடயத்தை கூறுவதற்கு சத்தியம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எனினும் ஸூரத்துல் ஸம்ஸ் எனும் அத்தியாயத்தில் 7 சத்தியங்கள் செய்து விட்டு அதற்கடுத்ததாக மேலேயுள்ள வசனத்தை கூறுகின்றானெனில் அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைந்துள்ளது.

இங்கு கூறப்பட்டிருக்கும் உளப்பரிசுத்ததின் முக்கியத்துவத்தை இன்று எம்மில் பெரும்பாலான வணக்கவாளிகள் கூட கவனத்தில் கொள்ளாமல் அமல்கள் மாத்திரமே எம்மை சுவனம் கொண்டு செல்ல போதுமானது என்ற போர்வையில் உளப்பரிசுத்தம் எனும் பெரும்பகுதியே கவனத்திற் கொள்ளமல் அதைக் கலங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு சிறந்த ஒரு சான்றாக நபி (ஸல்) அவர்கள் எல்லாவற்றின் மீதும் நல்லெண்ணம் வைத்த சாதாரண ஒரு வணக்கவாளியை சுவர்க்கவாசி என அடையாளப் படுத்தியதுடன் அவர்களும் உளத் தூய்மையை வேண்டி அதிகமதிகம் ஒவ்வொரு தொழுகையிலும் பின்வருமாறு பிரார்திப்பார்கள்.

‘நீயே உள்ளங்களின் தலைவனாகவும் அதனை தூய்மைப்படுத்துபவனாகவும் இருக்கின்றாய். எனது உள்ளத்தை தூய்மைப்படுத்துவாயாக’ (ஸஹிஹுல் புஹாரி)

இன்று எமது உள்ளங்கள் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும் அடுத்தவரை இழிவாகக் கருதுவதும் அடுத்தவர் மீது தப்பெண்ணம் கொள்வதும் அடுத்தவர்களின் வெற்றியை நமது தோல்வியாகவும் அடுத்தவரின் தோல்வியை தமது வெற்றியாகவும் கருதி நல்லதை நினைப்பதை விட்டும் திசைதிருப்பப்பட்ட உள்ளங்களாக மாறியிருக்கிறது.

இறைவா எங்கள் இதயத்தை அமைப்பிலும் தொழிற்பாட்டிலும் எந்தக் குறையுமின்றி அமைத்த நீயே அதைத் தூய்மைப்படுத்தக் கூடியவனாகவும் இருக் கின்றாய் ஆகையால் எங்களுடைய இதயங்களையும் தூய்மைப்பபடுத்தி அதனை செயற்பாட்டு ரீதியில் அசுத்தப்படுத்தும் கூட்டத் திலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருள்வானாக!

நன்றி : http://dharulathar.com

Monday, May 17, 2010

திருக்குர்ஆன் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்!

பைபிளைப் பற்றி முஸ்லீம்களால் எடுத்து வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு திருக்குர்ஆனிலும் தவறுகள் உள்ளது என்று எழுதத் தொடங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, திருக்குர்ஆனில் சரித்திரத் தவறுகள் இருப்பதாகவும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கவனக்குறைவாக பல தவறுகளை இழைத்துவிட்டதாகவும், அதை இவர்கள் கண்டுபிடித்துவிட்டது போன்று, தற்போது எழுதத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் ‘குர்ஆனில் சரித்திரத் தவறு – மரியால் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரியா?’ என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தமிழில் மொழிப்பெயர்த்து கிறிஸ்தவ தளங்களில் வெளியிடப்பட்டது.

குர்ஆனின் மீது குற்றம் சாட்டப்படும் அந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?

இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை சமர்ப்பிக்கின்றார் அந்த கிறிஸ்தவ நன்பர்:

3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி ‘என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: ‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்’ எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) ‘அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

19:27 பின்னர் (மர்யம் – மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: ‘மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!’

19:28 ‘ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை’ (என்று பழித்துக் கூறினார்கள்).

இந்த குர்ஆன் வசனங்களின் மூலம் அந்த கிறிஸ்தவர் கண்டுபிடித்த அபாரமான (?) கண்டுபிடிப்பின் முடிவை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

விளக்கம்:

யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

என்ன கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எவ்வளவு ஆய்வுப்பூர்வமான விளக்கம் பார்த்தீர்களா? இந்த அபாரமான கண்டுபிடிப்பை (?) படித்த Colvin என்ற கிறிஸ்தவர் உணர்ச்சி வசப்பட்டு


நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுது. கடைசியில் குர்ஆனின் சரித்திரத தவறுகளையெல்லாம் நீயே உன் கையால் புடமிடப் போகிறாய்

உனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.
நீ ஒரு ஆம்பளயா இருந்தா அதற்கு முதலில் பதில் அளி பார்ப்போம்.
எவ்வளவு வெறித்தனம்? எத்தனை நாள் கோபமோ! இது தான் இவர்கள் சமாதானத்தை போதித்த இயேசுவிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள் போலும்? அது இருக்கட்டும். அவர் கோரியபடி பதிலுக்கு வருவோம்.

இந்த தவறை (?) கண்டுபிடித்த கிறிஸ்தவர் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ? என்று எழுதுகின்றார்.

இவர் குற்றம் சுமத்துவது போல் எந்த இடத்தில் மரியாளை இறைதூதர்களான ஹாரூன் (ஆரோன்) மற்றும் மூசா (மோசே)வின் சொந்த சகோதரி என்று சொல்லப்பட்டுள்ளது? ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில், ஹாரூன் என்ற பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியாகவே திருக்குர்ஆன் மரியாளை அடையாளம் காட்டுகின்றது. இதில் என்ன தவறு கண்டுபிடித்துவிட்டனர் என்று நமக்குப் புரியவில்லை.

ஏனெனில், பொதுவாக ஒரு பெயர் உலகில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்குமா? அல்லது பலருக்கும் இருக்குமா? என்பதை சிந்திக்க மறந்துவிட்டார் இந்த ஆய்வை (?) சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று ‘மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது’ என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஏன் யோசிக்கவில்லை? குறிப்பாக முன் சென்ற தீர்க்கதரிகளுடைய அல்லது கர்த்தரால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய பரிசுத்தவான்களின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்கள் வைப்பார்களா? மாட்டார்களா? வைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றதா? இல்லையா? குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன் இந்த சாதாரன நடைமுறையை கூட ஏன் இந்த கிறிஸ்தவ நன்பர் சிந்திக்கவில்லை?

உதாரனமாக சொல்லவேண்டும் என்றால், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவில் இயேசுவினுடைய வம்சவரலாறைப் பற்றி சொல்லப்படுகின்றது. அந்த மத்தேயுவின் 1:16ம் வசனத்தில் ‘யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்’ என்று வருகின்றது. இதைப் படிக்கும் இந்த கிறிஸ்தவர், ‘மத்தேயு தவறாக எழுதிவிட்டார், யாக்கோபு என்பவர் ஈசாக்கின் மகன். இவர் பிறந்ததோ கிமு 1841. அந்த யாக்கோபின் குமாரன் தான் யோசேப்பு. இவர் பிறந்ததோ கிமு 1750. (பார்க்க ஆதியாகமம் 35:23-24) அந்த யோசேப்புக்கும் அவருக்குப் பின் 1750 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த மரியாளுக்கும் எப்படி திருமணம் நடந்திருக்கும்? இங்கே மத்தேயு தவறாக – கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா? அல்லது முந்தைய தீர்க்கதரிசிகளின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்களுக்கு வைக்கும் வழக்கமிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே மரியாளுடைய புருஷனாகிய யோசேப்புக்கும், அவரது தந்தையான யாக்கோபுக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்று முடிவு செய்வாரா?
குர்ஆனில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சரித்திரம் தெரியாமல் தவறாக எழுதிவிட்டார் என்று குற்றம்சுமத்தும் இந்த கிறிஸ்தவர், அதே கண்னோட்டத்தோடு மத்தேயுவும் பழைய ஏற்பாட்டை காப்பி அடிக்கும் போது கவனக்குறைவாக தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முன்வருவாரா? இதை முதலில் அந்த கிறிஸ்தவ நன்பரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அடுத்து, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைப்பது அவருக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்த காரணத்தினாலேயே தவிர, நபி (ஸல்) அவர்களின் கவனக்குறைவினால் நடந்த தவறு அல்ல என்பதை கிறிஸ்தவ நன்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியே இந்த ஹாரூன் என்றப் பெயர் இறைத்தூதர் ஹாரூனையே – (ஆரோனையே) குறிக்கும் என்றிருந்தால், ‘ஹாரூனுடைய சகோதரி’ என்று குறிப்பிடப்படும் இடத்தில் அவரைவீட மிகவும் பிரபலமானவரான முசா (மோசே) அவர்களைக் குறிப்பிட்டு ‘மூசாவின் சகோதரியே!’ என்று குறிப்பிட்டிருக்கலாமே? ஏனெனில் இறைதூதர்களான ஹாரூனும் முசாவும் சகோதரர்கள். ஹாரூனுக்கு சகோதரியாக இருப்பவர் மூசாவுக்கும் சகோதரியாகவே இருப்பார். அப்படி இருக்கும் நிலையில், இங்கே இறைதூதர் ஹாரூன்தான் நோக்கமாக இருந்திருந்தால், அவருக்கு பதில் பிரபலமான மோசேயை குறிப்பிட்டு கூறியிருக்கலாமே? எனவே இங்கே குறிப்பிடப்படும் ஹாரூன் என்பவர் மரியாளுடைய சொந்த சகோதரரையே குறிக்குமேயன்றி இறைதூதர் ஹாருனை அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதே கேள்வியை இப்பொழுது மட்டுமல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டு அதற்கு அன்றைக்கே பெருமானார் அவர்கள் பதிலும் அளித்துவிட்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நபித்தோழர் முஃகீரா பின் ஷூஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிலுள்ள)நஜ்ரான் நகரத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி ‘ஹாரூனுக்கும் மர்யமுக்கும் இடையே இன்னின்ன கால இடைவெளி இருக்கும்நிலையில் எவ்வாறு மர்யமை ஹாரூனுடைய சகோதரி என்று உங்கள் வேதம் கூறுகின்றது?’ என்று கேட்டார்கள். நான் மதீனா திரும்பியபின் இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள் ‘பனூஇஸ்ராயீல் மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), நல்லவர்கள் ஆகியோரின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிவந்தனர்’ என்று விளக்கமளித்தார்கள்.- நூல்: (ஸஹீஹ் முஸ்லீம், திர்மிதி, நஸயீ, முஸ்னது அஹ்மத்)

இந்த நபிமொழியின் படி பெருமானாரிடமே இன்றைய கிறிஸ்தவர்களால் கேட்கப்படும் அதி மேதாவித்தனமான கேள்வி அன்றைக்கே கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அக்காலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்சென்ற தீர்க்கதரிசிகளின் -நல்லவர்களின் பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று விளக்கமளிக்கின்றார்கள். எனவே, மரியாளுக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்தார். அந்த அடிப்படையில் அன்றைய சமூகத்தினர், மரியாளை அவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதைத் தான் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. எனவே இதில் ஒன்றும் தவறு நடந்துவிடவில்லை என்பதை இரண்டாவதாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அடுத்து இன்னொன்றையும் இங்கே முக்கியமாக விளக்கியாக வேண்டும். அதாவது, இந்தக் கேள்வி ஏன் இந்த கிறிஸ்தவர்களுக்கு எழுகின்றதென்றால், இவர்கள் இறைவேதமாக நமபும் பைபிளில் மரியாளுக்கு சகோதரர்கள் இருந்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அதை வைத்து, குர்ஆனில் சரித்திரத் தவறு என்ற இந்த குற்றச்சாட்டை கிறிஸ்தவ நண்பர் முன்வைக்கின்றார். இதுவும் ஒரு தவறான கண்னோட்டமே!

ஏனெனில், பைபிளில் மரியாளைப் பற்றி முழுமையான எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். யார் யாருடைய தகவல்களெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத பலரின் வம்சவரலாறுகளெல்லம் எழுதப்பட்டு பைபிளின் பக்கங்கள் வீனடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தையே இல்லாமல் பிறந்த இயேசுவுக்கு தந்தை வழி வம்சவரலாற்றை கூறப்படுகின்றது. (அதிலும் பல குளறுபடிகள்)இயேசுவை அதிசயமாக பெற்றெடுத்த பரிசுத்த பெண்மணியான மரியாளைப் பற்றிய தகவல்கள் மட்டும் வேண்டும் என்றே பைபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை யார்? அவரது தாயார் யார்? அவருக்கு சகோதரர் யாரும் இருக்கின்றார்களா? இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் – அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம்? சற்று சிந்திக்க வேண்டாமா? ஆனால்

மரியாளின் சகோதரர் யார் என்பது பற்றி நேரடியாக பைபிளில் சொல்லப்படவில்லை என்பதற்காக ‘ஹாருனின் சகோதரரியே’ என்று குர்ஆன் குறிப்பிடுவதை வைத்து திருக்குர்ஆனின் மீது கலங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், அவரின் தந்தையைப் பற்றியோ தாயாரைப் பற்றியோ அதே பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே! அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா? அவரது இறப்பு பற்றியோ அல்லது பிறப்பு பற்றியோ பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவரை ‘பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு அதிசயப் பிறவி’ என்று வாதிடுவார்களா?

அது மட்டுமல்ல, பல முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் நிரம்பிய பைபிளை வைத்து ஒருவருடைய வரலாற்றை ஆய்வு செய்யலாமா? அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா? அதுவும் ‘முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்’ என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா? பைபிளில் ஒன்று இரண்டு முரண்பாடா? இருக்கின்றது? நூற்றுக்கணக்கான முரண்பாடுகளும் ஆயிரக்கணக்கான தவறுகளும் நிறம்பிய ஒரு புத்தகம் எப்படி வரலாற்று ஆதாரமாக இருக்க முடியும்? குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும்? அப்படி பைபிளோடு உரசி குர்ஆனின் நம்பகத்தன்மையை எடைபோடுபவர்கள் முதலில் நாம் பைபிளின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கட்டும். அதன் பிறகு திருக்குர்ஆனை விமர்சிக்கட்டும்.

அடுத்து தனது கட்டுரையில், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார். இது குறித்து விரிவாக விளக்க வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் சுறுக்கமாக இங்கே பார்த்து விடுவோம்.

குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?

அந்த கிறிஸ்தவ நன்பர் பின்வரும் ஒரு குற்றச்சாட்டையும் தனது கட்டுரையில் முன்வைக்கின்றார்:

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

முதலில் பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துபவர்கள், பைபிள் எப்பொழுது அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்ற வரலாறை ஆய்வு செய்ய மறந்துவிடுகின்றனர். இவர்கள் உபயோகப்படுத்தும் இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிள், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் பொழுது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபிக்கு எப்படி அந்த பைபிள் பிரதி கிடைத்திருக்கும்? சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ பாதிரிமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பைபிளை விட்டும் பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்று கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டுமே படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும், அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாத பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கும் ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்டனர் என்றும் கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் குர்ஆனின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான ‘புரோட்டஸ்டன்ட்’ பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதே.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எப்படி அந்த பைபிள் கிடைத்திருக்கும். அதுவும் வேற்று மெழியான அரபியில்? சிந்திக்க வேண்டாமா?


எனவே கிறிஸ்தவர்களே! இஸ்லாத்தின் மீது இது போன்ற எந்த ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு, திருக்குர்ஆனை சத்தியத்தை அறியும் நோக்கத்துடன் படியுங்கள். அதன் மூலம் சத்தியத்தை அறியுங்கள் – சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

நன்றி: egathuvam.blogspot.com

முதுமையில் வாடும் ஒரு இளைஞன்


FM அஸ்லம்
(ரஜரட்டை மருத்துவபீடம்)
aslamaumsa@gmail.com

‘உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அழ்ழாஹ்வுடையது.’ (அல்குர்ஆன் 16:53)

கடந்த மாதம் அநுராதபுர போதனா வைத்தியசாலையின் 118ம் இலக்க பொது நோயியல் மருத்துவ விடுதியில் 24 வயது நிரம்பிய ஊர்காவற்படை வீரர் ஒருவர் தனது உடல் முழுவதும் தூக்க மயக்கமாகவும், களைப்பாகவும் இருப்பதுடன் உடல் முழுவதும் நோயிருப்பதாகவும் கூறி அனுமதிக்கப் பட்டிருந்தார்.

இவரை மேலதிக பரிசோதனைக் குட்படுத்திய போது கண், முண்டம் போன்றவை வீங்கியிருப்பதுடன் கண்புருவ மயிர்கள் உதிர்ந்தும் கையில் உள்ள தசைகள் விறைத்துப் போய் பலவீனமுற்று குரல் சத்தமும் தடிப்படைந்து உடல் தளர்ச்சியாகவும் காணப்பட்டது.

மேலும் இந்த இளைஞனின் தெறிவினைகள் தாமதாமாகி நிகழ்வதுடன் (Slow replacing reflex) இதயத்துடிப்பும் குறைவடைந்திருந்தது. இவ்வாறான அறிகுறிகள் கழுத்தில் குரல்வளைக்கு முன்புறமாக அமைந்துள்ள இரு சிறகுகளையும் விரித்து உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணாத்துப் பூச்சியின் அமைப்பை ஒத்த தைரொயிட் சுரப்பியினால் சுரக்கப்படும் தைரொக்ஸின் ஓமோனின் அளவு குறையும் போது தோன்றுவதால் இந்த ஓமோன் குருதியில் குறைவடைந்திருக்கலாம். ஏன சந்தேகிக்கப்பட்டு நிரூபிப்பதற்காக இந்த இளைஞனின் குருதி எடுக்கப்பட்டு அதில் உள்ள தைரொக்ஸின் ஓமோனின் அளவு கணிக்கப்பட்டது. இது சாதாரண சுகதேகியின் குருதியில் உள்ள அளவிலும் பார்க்க குறைவாகக் காணப்பட்டது.

உடலில் தைரொக்ஸின் ஓமோன் சுரத்தலானது மூன்று சுரப்பிகள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு தொடரான பொறிமுறையினூடாக நிகழ்கின்றது. அதாவது மூளையத்தில் அமைந்துள்ள பரிவகக்கீழ் எனும் சுரப்பியினால் முதலில் தைரொக்ஸின் விடுவிக்கும் ஓமோன் சுரக்கப்பட்டு இந்த ஓமோனானது குருதி மூலம் விடுவிக்கப்பட்ட தைரொயிட் சுரப்பியைத்தூண்டி தைரொக்ஸின் ஓமோனைச் சுரக்கச் செய்கின்றது. ஆகவே, இம்மூன்று சுரப்பிகளில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் பாதிப்புக்கள் தைரொக்ஸின் சுரத்தலைப் பாதிக்கின்றது.

மேலும் இந்த இளைஞனுக்கு எந்தச் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிவதற்காக இவருடைய தலையை CT Scan எடுத்து அவதானித்தபோது கபச்சுரப்பியில் ஒரு சிறிய கட்டியொன்று தோன்றி வளர்ந்து வருவது அவதானிக்கப்பட்டது. அதாவது கபச்சுரப்பியில் தோன்றியிருக்கும் இந்தக்கட்டி TSHச் சுரக்கும் கலங்களை நசுக்கி TSH சுரத்தலைக் குறைத்திருப்பதால் தைரொயிட் சுரப்பியைத் தூண்டுதல் குறைந்து தைரொக்ஸின் சுரத்தலைக் குறைத் திருக்கின்றது.

மேலும் இந்தக்கட்டி வளர்ந்து கொண்டு செல்லும் போது கபச்சுரப்பியால் சுரக்கப்படும் மற்றைய மிக முக்கியமான 5 ஓமோன்களின் சுரத்தலும் பாதிக்கப்படுவதால் வளர்ச்சி குன்றுதல், பெண்களின் பால் குறைவடைதல், மலட்டுத் தன்மை உருவாதல், உடல் நிறை குறைவடைதல், குருதிக் குளுக்கோஸில் அயன்களின் நிலை பாதிப்படைதல், போன்ற மற்றும் பல பிரச்சனைகளையும் தோற்றுவிக்கும். இக்கபச் சுரப்பியானது இரண்டு பக்கங்களிலிருந்து வரும் பார்வை நரம்புகள் குறுக்கிடும் இடத்துக்கு சராசரியாக சற்று மேலாக காணப்படுவதால் அதுவும் நசுக்கப்பட்டு இருபக்கமும் பக்க கண்களால் உள்ள பொருட்களை பார்க்க முடியாமல் ஆகிவிடும்.

தைரொக்ஸின் ஓமோனானது மூளை வளர்ச்சிக்கு அவசியமாகையால் இதன் குறைபாடு மந்த புத்தி, மதிமயக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தி யிருக்கின்றது. மேலும் தைரொக்ஸின் ஓமோனானது உடலின் வெப்ப வீதத்தைக் கூட்டி உருவாக்குவதன் மூலம் குளிர் காலங்களிலும் உடல் வெப்ப நிலை மாறுபடாமல் பேணி உடலிலுள்ள புரதங்கள், கலங்கள் அழிவடைவதைத் தடுக்கின்றது. இதனால் தைரொக்ஸின் குறைபாடுள்ளவர்கள் குளிர் காலங்களில் அல்லது குளிர்பிரதேசங்களில் வாழ முடியாமல் அவதியுறுகின்றார்கள்.

கபச்சுரப்பியால் பாதிப்பேற்படாமல் வேறு வழிகளில் தைரொக்ஸின் ஓமோன் குறைவடையும் போது இந்தக் குறைவானது எதிர் பின்னூட்டல் பொறிமுறை மூலம் கபச்சுரப்பியைத் தூண்டி அதிகளவு TSHஐச் சுரக்கச்செய்கின்றது. இந்த அதிகரித்த TSH ஆனது தைரொயிட் சுரப்பியைத் தூண்டி அதிகளவு வளர்ச்சி யடையச் செய்வதால் இச்சுரப்பியானது பருமனில் பெரிதாகி கழுத்தில் ஒரு பெரிய கட்டி இருப்பது போன்று தோற்றமளிக்கும். இது கண்டமாலை என அழைக்கப் படுகின்றது.


இச்சுரப்பியானது இவர்களின் சமூக வாழ்கையை பெரிதும் பாதிக்கின்றது. இதற்கு நிவாரணமாக இச்சுப்பியை வெட்டி அகற்றிவிட்டு பின்னர் மிருகங்களில் பெறப்பட்டு சந்தையில் விற்பனையாகின்ற தைரொக்ஸின் மாத்திரைகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வாழ்நாள் பூராக உட்கொள்ள வேண்டியிருக்கும். இம்மாத்திரைகள் வயோதிபர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்களில் மிக மோசமான பக்க விளைவு களையும் ஏற்படுத்துகின்றது. இச்சுரப்பியை வெட்டி அகற்றும் இச்சத்திர சிகிச்சையானது மிகவும் அபாயகரமானது. ஏனெனில், இச்சத்திர சிகிச்சையின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படுவதால் இச்சுரப்பியை மருவிக் கொண்டு குரல் வளைக்குச் செல்லும் நரம்புகள் தவறுதலாக வெட்டப்பட்டுவிடலாம். இதனால் நன்கு பேசிக்கொண்டிருந்த நோயாளி சத்திரசிகிச்சையின் பின்னர் கதைக்க முடியாமல் கூட ஆகிவிடும்.

மற்றும், இதன்போது தைரொக்ஸின் சுரப்பியின் நான்கு மூலைகளிலும் நான்கு பட்டன்கள் போல் அமைந்துள்ள புடைக்கேடையப் போலிச்சுரப்பியும் வெட்டி அகற்றப்பட்டுவிடக்கூடும். இவ்வாறு அகற்றப்படுமெனில் இச்சுரப்பியால் சுரக்கப்படும் ஓமோன் உடலில் அற்றுப்போவதால் கல்சியம் குறைவடைந்து வலிப்பு, கைவீக்கம் மற்றும் தசைச்சுருக்கம் என்பன ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்பங்களில் தைரொக்ஸினுடன் சேர்த்து கல்சியமும் வாழ்நாள் முழுவதும் கொடுக்கப்படவேண்டும்.

பகல் காலங்களில் வயலில் வேலை செய்தும், இரவில் ஊர்காவற்படை வீரராகவும் பணி புரிந்து உழைத்து, தனது வயதான அம்மாவையும் பரிபாலித்து வாழ்ந்து வந்த இந்த இளைஞனுக்கு திடீரென எந்த வேலையும் செய்ய முடியாமலும், துப்பாக்கியைக்கூட தூக்கி நடக்க முடியாமலும், வேறு எந்த தொழிலும் செய்ய முடியாமலும் அல்லலுறும் காட்சி அதிர்ச்சியானது. அதாவது எந்த அளவுக்கு எனில் தனது தாய்க்கு உதவிசெய்ய வேண்டிய இந்த இளைஞனுக்கு அவனுடைய வயதான தாய் அவனுக்கு உதவி செய்யும் நிலையை சற்று சிந்தித்துப் பார்ப்போமெனில் பிறவியில் எந்த ஊனமும் இன்றிப் பிறந்த இந்த இளைஞன் இளமைப் பருவத்தை யடைந்து இளமையின் சுகபோகங்கள் அனைத்தையும் நுகர்ந்து கொண்டிருந்த இந்த இளைஞனுக்கு திடீரென ஏற்பட்ட இந்த வயோதிப பன்புகள் அழ்ழாஹ் உடலின் ஆட்சியாளன் என்பதையும் எந்த நேரத்திலும் எதையுமே செய்துமுடிக்கப் போதுமானவன் என்பதையும் உணர்த்துகின்றதல்லவா?

‘மனிதனுக்கு நாம் அருளை அனுபவிக்கச்செய்து பின்னர் அவர்களிடமிருந்து அதை எடுத்துவிட்டால் அவன் நம்பிக்கை இழந்தவனாகவும், நம்மை மறுப்போனாகவும் மாறிவிடுகின்றான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் என்னை விட்டும் தீங்குகள் அகன்றுவிட்டன. என்று கூறுகின்றான். அவன் பெருமிதமும் கர்வமும் கொள்கின்றான்.’ (அல்குர்ஆன் 11:09)

பணம் மற்றும் பதவி படைத்தவர்கள் நான் கஷ்டப்பட்டு உழைத்ததாலும், கண்விழித்துப் படித்ததாலும் மற்றும் எனது திறமையினாலும்தான் இன்று நான் இந்த நிலைமையில் இருக்கின்றேன் என்று அழ்ழாஹ்வை மறந்து மார்தட்டிக் கொள்கின்றார்களே. இவர்கள் சிந்திக்கவேண்டாமா? இவர்களின் தைரொக்ஸின் ஓமோன்களைக் குறைத்து மந்தபுத்தி யுடையவர்களாகவும், சோம்பேறிகளாகவும், கழுத்தில் பெரிய கட்டியுடனும் வீட்டில் முடக்கி வைக்கப் போதுமான அழ்ழாஹ்வையும் மற்றும் அவனது ஆற்றல்களையும் சிந்திக்கவேண்டும்.

‘தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பிவிடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்துவிட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.’ (அல்குர்ஆன்-18:28)

அன்றாடம் தொழில் செய்து சுறுசுறுப்பாக அவர்களின் காரியங்களை முடித்துக் கொண்டு குடும்பங்களை நடாத்துகின்றவர்களும் இன்று தன்னை விட பணம், பதவியால் உயர்ந்தவனைப் பார்த்து இவரைப் போல் என்னையும் ஆக்கியிருக்கக்கூடாதா? என்று இறைவனைக் கடிந்து கொள்வதும் உண்டு. இவர்களுக்கு வழங்கியிருக்கும் ஆரோக்கியம் எனும் அருட்கொடையையும் தம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் ஏன் எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் அவதிப்படும் இந்த இளைஞனின் நிலைமையைக் கூட இவர்கள் சிந்திக்கவேண்டாமா?

எம்மை சுகத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழவைத்து உணவளித்துக் கொண்டிருக்கின்ற அழ்ழாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதுடன் அவனது அருட்கொடைகளை அவன் விரும்புகின்ற விதத்தில் பயன்படுத்தி நற்பேறு பெறுவோமாக.


நன்றி : http://dharulathar.com