Wednesday, May 19, 2010

நீல நிற இரத்தம் பம்பும் இதயமொன்று…



by:FM அஸ்லம் (ரஜரட்டை மருத்துவபீடம்) aslamaumsa@gmail.com

‘எவர் ஆத்மாவாகிய அதை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர் திட்டமாக வெற்றி பெற்றுவிட்டார்.’ (அல்குர்ஆன் 91:9)


மார்ச் மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை காலை அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டடுள்ள குழந்தைகளை பரிசீலித்துக்கொண்டு செல்லும் போதுஇ 12ம் இலக்கக் கட்டிலில் ஏழு மாதம் நிரம்பிய அழகான பெண் குழந்தையொன்று உழைத்துக் களைத்த மனிதன் உறங்குவது போன்று உறங்கிக்கொண்டிருந்தது. மேலும் குழந்தையின் இரு உதடுகளும் மற்றும் கால்இ கைகளிலுள்ள நகங்களும் நீல நிறச்சாயம் பூசி அலங்கரிக்கப்பட்டிருப்பது போன்று நீல நிறமாக மாறியிருந்தது.

அருகில் இருந்த தாயிடம் குழந்தையின் நோய் பற்றி வினவிய போது கடந்த சில தினங்களாக முன்னரை விட கடுமையாக குழந்தை சோர்வடைந் திருப்பதாகவும் பால் குடிக்க முடியாமல் திணறி அழுவதாகவும் மற்றும் அழும்

போது உடல் முழுவதும் நீல நிறமாக மாறுவதாகவும் கூறியபடி குழந்தையின் தலையணைக்குக்கீழ் இருந்து 2 கொப்பிகளையும் எழுதப்பட்ட சில தாள்களையும் எடுத்து நீட்டி குழந்தைக்கு இதய நோய் இருப்பதாகவும் அதற்காக குழந்தையை இரு மாதத்திற்கு ஒரு முறை கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்குக்காக அழைத்துச் செல்வதாகவும் கடைசியாக சென்ற கிளினிக்கில் குழந்தைக்கிருக்கும் நோயை சத்திர சிகிச்சை செய்து மாத்திரமே குணப்படுத்த முடியும் எனவும் பெரிய வைத்தியர் கூறிவிட்டார் என்று முற்றாக கூறி வார்த்தைகள் வராமல் விம்மலுடன் முடித்தார்.

கருவாக இருந்த காலத்தில் இக்குழந்தையின் இதயம் விருத்தியடையும் போது ஏற்பட்ட ஒரு சிறு விபத்தினால் சாதாரண இதயத்தின் அமைப்பில் நின்றும் வேறுபட்ட பல குறைபாடுகளுடன் கூடிய இவ்விதயத்தினால் இக்குழந்தையின் உயிருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அலசுவதற்கு முன்னர் சாதாரண இதயம் எவ்வாறு ஒழுங்கமைக்கப் பட்டிருக்கிறது மற்றும் அது எவ்வாறு தொழிற்படுகின்றது என்று முதலில் நோக்குவோம்.

சாதாரண ஒரு மனித இதயத்தின் அமைப்பை நோக்கும் போது அது மேற்புறமாக இரண்டு சோனை யறைகளும் கீழ்புறமாக இரண்டு இதயவறைகளுமாக நான்கு அறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இரண்டு சோனையறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புறாத வகையில் சோனையறை பிரிசுவரால் இதயவறைகளும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே பக்கமாக அமைந்துள்ள இதயவறைகளும் சோனையறைகளும் கதவு போன்று திறந்து மூடக்கூடிய வால்பு மூலம் தொடர்புருகின்றன.

வலது சோனையறையினுள் மேற்பெருநாளம் கீழ்பெருநாளம் எனும் இரு பெரிய நாளங்களும் இடது சோனையறையினுள் நான்கு சுவாசப்பை நாளங்களும் திறக்கின்றன. மற்றும் வலது இதயவறையிலிருந்து ஒரு சுவாசப்பை நாடி உதித்து இரண்டாகப் பிரிந்து இரண்டு சுவாசப் பைகளையும் சென்றடைகின்றது. அதேபோல் இடது இதயவறையில் இருந்து தொகுதிப் பெருநாடி எனும் ஒரு பெரிய நாடி உதித்து அதிலிருந்து பல வகையான கிளை நாடிகள் தோன்றி தலை கை கால் உட்பட உடலின் எல்லாப் பாகங்களுக்கும் குருதியை வினியோகிப்பதற்காக சென்றடைகின்றது.

உடலின் மேற்பகுதியால் பயன்படுத்தப்பட்ட ஒட்சிசன் குறைவான நிலையில் உள்ள குருதி மேற்பெருநாளத்தினூடாகவும் உடலின் கீழ்பகுதியால் பயன்படுத்தப்படு ஒட்சிசன் குறைவான நிலையில் உள்ள குருதி கீழ்பெருநாளத்தினூடாகவும் வலது சோனையறையினுள் ஊற்றப்படுகின்றது. பின்னர் வலது சோனையறை சுருங்கும் போது அதற்குள் வந்தடைந்த குருதி முழுவதும் வால்பின் உதவியினூடாக வலது இதயவறைக்குள் மாற்றப்பட்டு பின்னர் வலது இதயவறை சுருங்கும் போது அங்கிருந்து குருதியானது சுவாசப்பை நாடியினூடாக சுவாசப்பைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நாம் சுவாசிப்பதன் மூலம் வளிமண்டலத்திலிருந்து உள்ளெடுக்கப்பட்டு சுவாசப்பையை (நுரையீரலை) அடையும் ஒட்சிசனில் கரைக்கப்பட்டு விளைவாகும் ஒட்சியேற்றப்பட்ட குருதி சுவாசப்பையிலிருந்து நான்கு சுவாசப்பை நாளங்களுடாக இடது சோனையறையை அடைந்து அங்கிருந்ந பின்னர் வால்பினுடாக இடது இதயவறையை அடைகின்றது.

ஒட்சியேற்றப்பட்ட குருதி இடது இதயவறையை வந்தடைந்த பின்னர் அது சுருங்க ஆரம்பித்து சுருங்கும் போது தொகுதிப் பெருநாடியினூடாக அவ் ஒட்சியேற்றப்பட்ட குருதி உடலின் எல்லாப்பாகங்களுக்கும் சென்றடைவதால் உடலில் உள்ள 60 ரில்லியனுக்கும் மேற்பட்ட கலங்களும் இவ் ஒட்சிசனைப் பயன்படுத்தி சக்தியை உருவாக்குவதன் மூலம் எம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.

இதனால் தான் விபத்துக்கள் மற்றும் பல காரணங்களாள் சுயநினைவிழந்து அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சுவாசப் பாதையில் ஏதாவது அடைப்புகள் ஏற்பட்டு சுவாசம் தடைப்படுகின்றதா? மற்றும் சுவாசம் ஒழுங்காக நடைபெறுகின்றதா? என்பனவே முதன்முதலாக பரீட்சிக்கப்படும் அளவுக்கு ஒட்சிசன் தேவையானது உடலுக்கு மிக இன்றியமையாததாகும்.

முளையமானது கருப்பையில் உட்பதிக்கப்பட்டு நான்கு வாரங்களின் பின்னர் நிகழும் மடாதல் எனும் செயற்பாட்டின் மூலம் இதயம் விருத்தியடையத் தொடங்கும். இதன் போது இரண்டு இதயவறைகளையும் பிரித்து உருவாகும் இதயவறைப் பிரிசுவரின் மேற்பகுதி சற்று முன்பின்னாக்கி விலகுவதால் இதயவறைகள் முற்றாக பிரிக்கப்படாமலும் தொகுதிப்பெருநாடி வலது சோனையறைக்குள் உட்செல்லும்.

சுவாசப் பைநாடி சற்று நெருக்கப்பட்டு அதன் விட்டம் குறைவடைந்தும் மற்றும் விட்டம் குறைவடைந்து காணப்படும் நாடியினூடாக குருதியை பம்புவதற்கு அதிக விசையைப் பிரயோகிப்பதற்காக வலது இதயவறை சற்றுத் தடித்தும் பெரிதாகியும் காணப்படும்.

கிரேக்கத்தில் நான்கைக் குறிப்பதற்காக Tetra எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இதனால்தான் சாதாரண இதயத்தில் இருந்தும் வேறுபட்ட மேற்கூறப்பட்ட நான்கு குறைபாட்டைக் கொண்ட இவ்விதயத்திற்கு Tetrology of fallot எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான குறைபாட்டினால் வலது இதயவறையை வந்தடையும் ஒட்சியேற்றப்படாத குருதியின் ஒரு பகுதி வலது இதயவறை சுருங்கும் போது சுவாசப்பைக்குச் சென்று ஒட்சியேற்றப்படாமலேயே வலது இதயவறையினுல் உட்புகுந்து காணப்படும் தொகுதிப் பெருநாடியினூடாக செல்வதனால் ஒட்சிசன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் உடற்கலங்களுக்கு தாகம் தீர்க்க முடியாமல் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

இவ்வாறான ஒட்சிசன் தட்டுப்பாட்டினால் ஏழு மாதமாகியும் இன்னும் சுயமாக இருக்க முடியாதளவுக்கு இக்குழந்தையின் வளர்ச்சி குறைவடைந்திருப்பதுடன் மேலும் இக்குழந்தை வளரும் போது அதிகளவு ஒட்சிசன் தேவைப்படுவதாலும் இத்தேவைக்கேற்ப ஒட்சிசன் வழங்க முடியாமல் இதயம் திணறுவதால் பூப்படைதல் உட்பட குழந்தையின் எல்லா வளர்ச்சி கட்டங்களும் தாமதமாகியே நடைபெறும்.

மற்றும் இவ்வாறான குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது தொடர்ச்சியாக விளையாட முடியாமல் உடல் முழுவதும் நீல நிறமாகி இடைநடுவிலேயே ஓரமாகி ஓய்வெடுத்துக் கொள்ளும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்குழந்தையை முகங்குப்பற படுக்கப் (Knee – Chest position)போடுவதன் மூலம் பகுதியான சிறிதளவு நிவாரணமும் கிடைக்கின்றது.

இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக தொடையிலிருந்து ஒரு நாளம் வெட்டி எடுக்கப்பட்டு அதனால் சுவாசப்பை நாடியும் தொகுதிப் பெருநாடியும் இணைக்கப்பட்டு அவற்றிற்கிடையே தொடர்பு ஏற்படுத்தப் படுகின்றது. இதனால் தொகுதிப் பெருநாடியினூடாக செல்லும் ஒட்சிசன் அகற்றப்பட்ட குருதி சுவாசப்பை நாடியினுல் மாற்றப்பட்டு சுவாசப்பை நாடியினூடாக சுவாசப் பையினுல் எடுக்கப்பட்டு ஒட்சியேற்றி அனுப்பபடும் இச்சத்திர சிகிச்சை Blalock – Taussig Shunt என அழைக்கப்படுகிறது.

பல இலட்சங்கள் செலவு செய்து செய்யப்படும் இச்சத்திர சிகிச்சையின் போது துரதிஷ்டவசமாக இதயத்துடன் மருவிச் செல்லும் நரம்புகள் (Phrenic nerve) இதயச் சுவாசத்துக்கான சமிக்ஞைத் தொகுதி (conducting systerm) என்பன சத்திர சிகிச்சை நிபுணரின் (surgeon) கத்தியில் அகப்படும் போது மரணம் கூட சம்பவிக்கக் கூடும்.

பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளில் பத்துக் குழந்தைகள் இவ்வாறான குறைபாட்டுடன் பிறப்பதாகவும் அந்தப்பத்துக்குள் எம்மையும் உள்ளடக்காமல் எந்தக் குறையுமின்றி வடிவத்தில் அழகாக அமைத்திருந்தும் இன்று நாம் அதை பொறாமை பெருமை தலக்கணம் ஆணவம் போன்றவைகள் குடியிருக்குமிடமாக மாற்றி எம்மிதயத்தை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.

‘அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.’ (அல்குர்ஆன்- 91:9)

‘உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்துகொள்ளுங் கள் அதுதான் இதயம். என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

‘(அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-52)

இறைவன் ஒரு விடயத்தை கூறுவதற்கு சத்தியம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எனினும் ஸூரத்துல் ஸம்ஸ் எனும் அத்தியாயத்தில் 7 சத்தியங்கள் செய்து விட்டு அதற்கடுத்ததாக மேலேயுள்ள வசனத்தை கூறுகின்றானெனில் அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைந்துள்ளது.

இங்கு கூறப்பட்டிருக்கும் உளப்பரிசுத்ததின் முக்கியத்துவத்தை இன்று எம்மில் பெரும்பாலான வணக்கவாளிகள் கூட கவனத்தில் கொள்ளாமல் அமல்கள் மாத்திரமே எம்மை சுவனம் கொண்டு செல்ல போதுமானது என்ற போர்வையில் உளப்பரிசுத்தம் எனும் பெரும்பகுதியே கவனத்திற் கொள்ளமல் அதைக் கலங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு சிறந்த ஒரு சான்றாக நபி (ஸல்) அவர்கள் எல்லாவற்றின் மீதும் நல்லெண்ணம் வைத்த சாதாரண ஒரு வணக்கவாளியை சுவர்க்கவாசி என அடையாளப் படுத்தியதுடன் அவர்களும் உளத் தூய்மையை வேண்டி அதிகமதிகம் ஒவ்வொரு தொழுகையிலும் பின்வருமாறு பிரார்திப்பார்கள்.

‘நீயே உள்ளங்களின் தலைவனாகவும் அதனை தூய்மைப்படுத்துபவனாகவும் இருக்கின்றாய். எனது உள்ளத்தை தூய்மைப்படுத்துவாயாக’ (ஸஹிஹுல் புஹாரி)

இன்று எமது உள்ளங்கள் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும் அடுத்தவரை இழிவாகக் கருதுவதும் அடுத்தவர் மீது தப்பெண்ணம் கொள்வதும் அடுத்தவர்களின் வெற்றியை நமது தோல்வியாகவும் அடுத்தவரின் தோல்வியை தமது வெற்றியாகவும் கருதி நல்லதை நினைப்பதை விட்டும் திசைதிருப்பப்பட்ட உள்ளங்களாக மாறியிருக்கிறது.

இறைவா எங்கள் இதயத்தை அமைப்பிலும் தொழிற்பாட்டிலும் எந்தக் குறையுமின்றி அமைத்த நீயே அதைத் தூய்மைப்படுத்தக் கூடியவனாகவும் இருக் கின்றாய் ஆகையால் எங்களுடைய இதயங்களையும் தூய்மைப்பபடுத்தி அதனை செயற்பாட்டு ரீதியில் அசுத்தப்படுத்தும் கூட்டத் திலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருள்வானாக!

நன்றி : http://dharulathar.com

Monday, May 17, 2010

திருக்குர்ஆன் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்!

பைபிளைப் பற்றி முஸ்லீம்களால் எடுத்து வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு திருக்குர்ஆனிலும் தவறுகள் உள்ளது என்று எழுதத் தொடங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, திருக்குர்ஆனில் சரித்திரத் தவறுகள் இருப்பதாகவும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கவனக்குறைவாக பல தவறுகளை இழைத்துவிட்டதாகவும், அதை இவர்கள் கண்டுபிடித்துவிட்டது போன்று, தற்போது எழுதத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் ‘குர்ஆனில் சரித்திரத் தவறு – மரியால் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரியா?’ என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தமிழில் மொழிப்பெயர்த்து கிறிஸ்தவ தளங்களில் வெளியிடப்பட்டது.

குர்ஆனின் மீது குற்றம் சாட்டப்படும் அந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?

இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை சமர்ப்பிக்கின்றார் அந்த கிறிஸ்தவ நன்பர்:

3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி ‘என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: ‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்’ எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) ‘அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

19:27 பின்னர் (மர்யம் – மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: ‘மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!’

19:28 ‘ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை’ (என்று பழித்துக் கூறினார்கள்).

இந்த குர்ஆன் வசனங்களின் மூலம் அந்த கிறிஸ்தவர் கண்டுபிடித்த அபாரமான (?) கண்டுபிடிப்பின் முடிவை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

விளக்கம்:

யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

என்ன கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எவ்வளவு ஆய்வுப்பூர்வமான விளக்கம் பார்த்தீர்களா? இந்த அபாரமான கண்டுபிடிப்பை (?) படித்த Colvin என்ற கிறிஸ்தவர் உணர்ச்சி வசப்பட்டு


நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுது. கடைசியில் குர்ஆனின் சரித்திரத தவறுகளையெல்லாம் நீயே உன் கையால் புடமிடப் போகிறாய்

உனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.
நீ ஒரு ஆம்பளயா இருந்தா அதற்கு முதலில் பதில் அளி பார்ப்போம்.
எவ்வளவு வெறித்தனம்? எத்தனை நாள் கோபமோ! இது தான் இவர்கள் சமாதானத்தை போதித்த இயேசுவிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள் போலும்? அது இருக்கட்டும். அவர் கோரியபடி பதிலுக்கு வருவோம்.

இந்த தவறை (?) கண்டுபிடித்த கிறிஸ்தவர் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ? என்று எழுதுகின்றார்.

இவர் குற்றம் சுமத்துவது போல் எந்த இடத்தில் மரியாளை இறைதூதர்களான ஹாரூன் (ஆரோன்) மற்றும் மூசா (மோசே)வின் சொந்த சகோதரி என்று சொல்லப்பட்டுள்ளது? ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில், ஹாரூன் என்ற பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியாகவே திருக்குர்ஆன் மரியாளை அடையாளம் காட்டுகின்றது. இதில் என்ன தவறு கண்டுபிடித்துவிட்டனர் என்று நமக்குப் புரியவில்லை.

ஏனெனில், பொதுவாக ஒரு பெயர் உலகில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்குமா? அல்லது பலருக்கும் இருக்குமா? என்பதை சிந்திக்க மறந்துவிட்டார் இந்த ஆய்வை (?) சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று ‘மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது’ என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஏன் யோசிக்கவில்லை? குறிப்பாக முன் சென்ற தீர்க்கதரிகளுடைய அல்லது கர்த்தரால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய பரிசுத்தவான்களின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்கள் வைப்பார்களா? மாட்டார்களா? வைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றதா? இல்லையா? குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன் இந்த சாதாரன நடைமுறையை கூட ஏன் இந்த கிறிஸ்தவ நன்பர் சிந்திக்கவில்லை?

உதாரனமாக சொல்லவேண்டும் என்றால், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவில் இயேசுவினுடைய வம்சவரலாறைப் பற்றி சொல்லப்படுகின்றது. அந்த மத்தேயுவின் 1:16ம் வசனத்தில் ‘யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்’ என்று வருகின்றது. இதைப் படிக்கும் இந்த கிறிஸ்தவர், ‘மத்தேயு தவறாக எழுதிவிட்டார், யாக்கோபு என்பவர் ஈசாக்கின் மகன். இவர் பிறந்ததோ கிமு 1841. அந்த யாக்கோபின் குமாரன் தான் யோசேப்பு. இவர் பிறந்ததோ கிமு 1750. (பார்க்க ஆதியாகமம் 35:23-24) அந்த யோசேப்புக்கும் அவருக்குப் பின் 1750 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த மரியாளுக்கும் எப்படி திருமணம் நடந்திருக்கும்? இங்கே மத்தேயு தவறாக – கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா? அல்லது முந்தைய தீர்க்கதரிசிகளின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்களுக்கு வைக்கும் வழக்கமிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே மரியாளுடைய புருஷனாகிய யோசேப்புக்கும், அவரது தந்தையான யாக்கோபுக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்று முடிவு செய்வாரா?
குர்ஆனில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சரித்திரம் தெரியாமல் தவறாக எழுதிவிட்டார் என்று குற்றம்சுமத்தும் இந்த கிறிஸ்தவர், அதே கண்னோட்டத்தோடு மத்தேயுவும் பழைய ஏற்பாட்டை காப்பி அடிக்கும் போது கவனக்குறைவாக தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முன்வருவாரா? இதை முதலில் அந்த கிறிஸ்தவ நன்பரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அடுத்து, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைப்பது அவருக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்த காரணத்தினாலேயே தவிர, நபி (ஸல்) அவர்களின் கவனக்குறைவினால் நடந்த தவறு அல்ல என்பதை கிறிஸ்தவ நன்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியே இந்த ஹாரூன் என்றப் பெயர் இறைத்தூதர் ஹாரூனையே – (ஆரோனையே) குறிக்கும் என்றிருந்தால், ‘ஹாரூனுடைய சகோதரி’ என்று குறிப்பிடப்படும் இடத்தில் அவரைவீட மிகவும் பிரபலமானவரான முசா (மோசே) அவர்களைக் குறிப்பிட்டு ‘மூசாவின் சகோதரியே!’ என்று குறிப்பிட்டிருக்கலாமே? ஏனெனில் இறைதூதர்களான ஹாரூனும் முசாவும் சகோதரர்கள். ஹாரூனுக்கு சகோதரியாக இருப்பவர் மூசாவுக்கும் சகோதரியாகவே இருப்பார். அப்படி இருக்கும் நிலையில், இங்கே இறைதூதர் ஹாரூன்தான் நோக்கமாக இருந்திருந்தால், அவருக்கு பதில் பிரபலமான மோசேயை குறிப்பிட்டு கூறியிருக்கலாமே? எனவே இங்கே குறிப்பிடப்படும் ஹாரூன் என்பவர் மரியாளுடைய சொந்த சகோதரரையே குறிக்குமேயன்றி இறைதூதர் ஹாருனை அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதே கேள்வியை இப்பொழுது மட்டுமல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டு அதற்கு அன்றைக்கே பெருமானார் அவர்கள் பதிலும் அளித்துவிட்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நபித்தோழர் முஃகீரா பின் ஷூஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிலுள்ள)நஜ்ரான் நகரத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி ‘ஹாரூனுக்கும் மர்யமுக்கும் இடையே இன்னின்ன கால இடைவெளி இருக்கும்நிலையில் எவ்வாறு மர்யமை ஹாரூனுடைய சகோதரி என்று உங்கள் வேதம் கூறுகின்றது?’ என்று கேட்டார்கள். நான் மதீனா திரும்பியபின் இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள் ‘பனூஇஸ்ராயீல் மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), நல்லவர்கள் ஆகியோரின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிவந்தனர்’ என்று விளக்கமளித்தார்கள்.- நூல்: (ஸஹீஹ் முஸ்லீம், திர்மிதி, நஸயீ, முஸ்னது அஹ்மத்)

இந்த நபிமொழியின் படி பெருமானாரிடமே இன்றைய கிறிஸ்தவர்களால் கேட்கப்படும் அதி மேதாவித்தனமான கேள்வி அன்றைக்கே கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அக்காலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்சென்ற தீர்க்கதரிசிகளின் -நல்லவர்களின் பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று விளக்கமளிக்கின்றார்கள். எனவே, மரியாளுக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்தார். அந்த அடிப்படையில் அன்றைய சமூகத்தினர், மரியாளை அவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதைத் தான் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. எனவே இதில் ஒன்றும் தவறு நடந்துவிடவில்லை என்பதை இரண்டாவதாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அடுத்து இன்னொன்றையும் இங்கே முக்கியமாக விளக்கியாக வேண்டும். அதாவது, இந்தக் கேள்வி ஏன் இந்த கிறிஸ்தவர்களுக்கு எழுகின்றதென்றால், இவர்கள் இறைவேதமாக நமபும் பைபிளில் மரியாளுக்கு சகோதரர்கள் இருந்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அதை வைத்து, குர்ஆனில் சரித்திரத் தவறு என்ற இந்த குற்றச்சாட்டை கிறிஸ்தவ நண்பர் முன்வைக்கின்றார். இதுவும் ஒரு தவறான கண்னோட்டமே!

ஏனெனில், பைபிளில் மரியாளைப் பற்றி முழுமையான எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். யார் யாருடைய தகவல்களெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத பலரின் வம்சவரலாறுகளெல்லம் எழுதப்பட்டு பைபிளின் பக்கங்கள் வீனடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தையே இல்லாமல் பிறந்த இயேசுவுக்கு தந்தை வழி வம்சவரலாற்றை கூறப்படுகின்றது. (அதிலும் பல குளறுபடிகள்)இயேசுவை அதிசயமாக பெற்றெடுத்த பரிசுத்த பெண்மணியான மரியாளைப் பற்றிய தகவல்கள் மட்டும் வேண்டும் என்றே பைபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை யார்? அவரது தாயார் யார்? அவருக்கு சகோதரர் யாரும் இருக்கின்றார்களா? இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் – அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம்? சற்று சிந்திக்க வேண்டாமா? ஆனால்

மரியாளின் சகோதரர் யார் என்பது பற்றி நேரடியாக பைபிளில் சொல்லப்படவில்லை என்பதற்காக ‘ஹாருனின் சகோதரரியே’ என்று குர்ஆன் குறிப்பிடுவதை வைத்து திருக்குர்ஆனின் மீது கலங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், அவரின் தந்தையைப் பற்றியோ தாயாரைப் பற்றியோ அதே பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே! அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா? அவரது இறப்பு பற்றியோ அல்லது பிறப்பு பற்றியோ பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவரை ‘பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு அதிசயப் பிறவி’ என்று வாதிடுவார்களா?

அது மட்டுமல்ல, பல முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் நிரம்பிய பைபிளை வைத்து ஒருவருடைய வரலாற்றை ஆய்வு செய்யலாமா? அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா? அதுவும் ‘முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்’ என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா? பைபிளில் ஒன்று இரண்டு முரண்பாடா? இருக்கின்றது? நூற்றுக்கணக்கான முரண்பாடுகளும் ஆயிரக்கணக்கான தவறுகளும் நிறம்பிய ஒரு புத்தகம் எப்படி வரலாற்று ஆதாரமாக இருக்க முடியும்? குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும்? அப்படி பைபிளோடு உரசி குர்ஆனின் நம்பகத்தன்மையை எடைபோடுபவர்கள் முதலில் நாம் பைபிளின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கட்டும். அதன் பிறகு திருக்குர்ஆனை விமர்சிக்கட்டும்.

அடுத்து தனது கட்டுரையில், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார். இது குறித்து விரிவாக விளக்க வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் சுறுக்கமாக இங்கே பார்த்து விடுவோம்.

குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?

அந்த கிறிஸ்தவ நன்பர் பின்வரும் ஒரு குற்றச்சாட்டையும் தனது கட்டுரையில் முன்வைக்கின்றார்:

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

முதலில் பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துபவர்கள், பைபிள் எப்பொழுது அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்ற வரலாறை ஆய்வு செய்ய மறந்துவிடுகின்றனர். இவர்கள் உபயோகப்படுத்தும் இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிள், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் பொழுது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபிக்கு எப்படி அந்த பைபிள் பிரதி கிடைத்திருக்கும்? சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ பாதிரிமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பைபிளை விட்டும் பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்று கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டுமே படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும், அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாத பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கும் ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்டனர் என்றும் கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் குர்ஆனின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான ‘புரோட்டஸ்டன்ட்’ பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதே.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எப்படி அந்த பைபிள் கிடைத்திருக்கும். அதுவும் வேற்று மெழியான அரபியில்? சிந்திக்க வேண்டாமா?


எனவே கிறிஸ்தவர்களே! இஸ்லாத்தின் மீது இது போன்ற எந்த ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு, திருக்குர்ஆனை சத்தியத்தை அறியும் நோக்கத்துடன் படியுங்கள். அதன் மூலம் சத்தியத்தை அறியுங்கள் – சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

நன்றி: egathuvam.blogspot.com

முதுமையில் வாடும் ஒரு இளைஞன்


FM அஸ்லம்
(ரஜரட்டை மருத்துவபீடம்)
aslamaumsa@gmail.com

‘உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அழ்ழாஹ்வுடையது.’ (அல்குர்ஆன் 16:53)

கடந்த மாதம் அநுராதபுர போதனா வைத்தியசாலையின் 118ம் இலக்க பொது நோயியல் மருத்துவ விடுதியில் 24 வயது நிரம்பிய ஊர்காவற்படை வீரர் ஒருவர் தனது உடல் முழுவதும் தூக்க மயக்கமாகவும், களைப்பாகவும் இருப்பதுடன் உடல் முழுவதும் நோயிருப்பதாகவும் கூறி அனுமதிக்கப் பட்டிருந்தார்.

இவரை மேலதிக பரிசோதனைக் குட்படுத்திய போது கண், முண்டம் போன்றவை வீங்கியிருப்பதுடன் கண்புருவ மயிர்கள் உதிர்ந்தும் கையில் உள்ள தசைகள் விறைத்துப் போய் பலவீனமுற்று குரல் சத்தமும் தடிப்படைந்து உடல் தளர்ச்சியாகவும் காணப்பட்டது.

மேலும் இந்த இளைஞனின் தெறிவினைகள் தாமதாமாகி நிகழ்வதுடன் (Slow replacing reflex) இதயத்துடிப்பும் குறைவடைந்திருந்தது. இவ்வாறான அறிகுறிகள் கழுத்தில் குரல்வளைக்கு முன்புறமாக அமைந்துள்ள இரு சிறகுகளையும் விரித்து உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணாத்துப் பூச்சியின் அமைப்பை ஒத்த தைரொயிட் சுரப்பியினால் சுரக்கப்படும் தைரொக்ஸின் ஓமோனின் அளவு குறையும் போது தோன்றுவதால் இந்த ஓமோன் குருதியில் குறைவடைந்திருக்கலாம். ஏன சந்தேகிக்கப்பட்டு நிரூபிப்பதற்காக இந்த இளைஞனின் குருதி எடுக்கப்பட்டு அதில் உள்ள தைரொக்ஸின் ஓமோனின் அளவு கணிக்கப்பட்டது. இது சாதாரண சுகதேகியின் குருதியில் உள்ள அளவிலும் பார்க்க குறைவாகக் காணப்பட்டது.

உடலில் தைரொக்ஸின் ஓமோன் சுரத்தலானது மூன்று சுரப்பிகள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு தொடரான பொறிமுறையினூடாக நிகழ்கின்றது. அதாவது மூளையத்தில் அமைந்துள்ள பரிவகக்கீழ் எனும் சுரப்பியினால் முதலில் தைரொக்ஸின் விடுவிக்கும் ஓமோன் சுரக்கப்பட்டு இந்த ஓமோனானது குருதி மூலம் விடுவிக்கப்பட்ட தைரொயிட் சுரப்பியைத்தூண்டி தைரொக்ஸின் ஓமோனைச் சுரக்கச் செய்கின்றது. ஆகவே, இம்மூன்று சுரப்பிகளில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் பாதிப்புக்கள் தைரொக்ஸின் சுரத்தலைப் பாதிக்கின்றது.

மேலும் இந்த இளைஞனுக்கு எந்தச் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிவதற்காக இவருடைய தலையை CT Scan எடுத்து அவதானித்தபோது கபச்சுரப்பியில் ஒரு சிறிய கட்டியொன்று தோன்றி வளர்ந்து வருவது அவதானிக்கப்பட்டது. அதாவது கபச்சுரப்பியில் தோன்றியிருக்கும் இந்தக்கட்டி TSHச் சுரக்கும் கலங்களை நசுக்கி TSH சுரத்தலைக் குறைத்திருப்பதால் தைரொயிட் சுரப்பியைத் தூண்டுதல் குறைந்து தைரொக்ஸின் சுரத்தலைக் குறைத் திருக்கின்றது.

மேலும் இந்தக்கட்டி வளர்ந்து கொண்டு செல்லும் போது கபச்சுரப்பியால் சுரக்கப்படும் மற்றைய மிக முக்கியமான 5 ஓமோன்களின் சுரத்தலும் பாதிக்கப்படுவதால் வளர்ச்சி குன்றுதல், பெண்களின் பால் குறைவடைதல், மலட்டுத் தன்மை உருவாதல், உடல் நிறை குறைவடைதல், குருதிக் குளுக்கோஸில் அயன்களின் நிலை பாதிப்படைதல், போன்ற மற்றும் பல பிரச்சனைகளையும் தோற்றுவிக்கும். இக்கபச் சுரப்பியானது இரண்டு பக்கங்களிலிருந்து வரும் பார்வை நரம்புகள் குறுக்கிடும் இடத்துக்கு சராசரியாக சற்று மேலாக காணப்படுவதால் அதுவும் நசுக்கப்பட்டு இருபக்கமும் பக்க கண்களால் உள்ள பொருட்களை பார்க்க முடியாமல் ஆகிவிடும்.

தைரொக்ஸின் ஓமோனானது மூளை வளர்ச்சிக்கு அவசியமாகையால் இதன் குறைபாடு மந்த புத்தி, மதிமயக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தி யிருக்கின்றது. மேலும் தைரொக்ஸின் ஓமோனானது உடலின் வெப்ப வீதத்தைக் கூட்டி உருவாக்குவதன் மூலம் குளிர் காலங்களிலும் உடல் வெப்ப நிலை மாறுபடாமல் பேணி உடலிலுள்ள புரதங்கள், கலங்கள் அழிவடைவதைத் தடுக்கின்றது. இதனால் தைரொக்ஸின் குறைபாடுள்ளவர்கள் குளிர் காலங்களில் அல்லது குளிர்பிரதேசங்களில் வாழ முடியாமல் அவதியுறுகின்றார்கள்.

கபச்சுரப்பியால் பாதிப்பேற்படாமல் வேறு வழிகளில் தைரொக்ஸின் ஓமோன் குறைவடையும் போது இந்தக் குறைவானது எதிர் பின்னூட்டல் பொறிமுறை மூலம் கபச்சுரப்பியைத் தூண்டி அதிகளவு TSHஐச் சுரக்கச்செய்கின்றது. இந்த அதிகரித்த TSH ஆனது தைரொயிட் சுரப்பியைத் தூண்டி அதிகளவு வளர்ச்சி யடையச் செய்வதால் இச்சுரப்பியானது பருமனில் பெரிதாகி கழுத்தில் ஒரு பெரிய கட்டி இருப்பது போன்று தோற்றமளிக்கும். இது கண்டமாலை என அழைக்கப் படுகின்றது.


இச்சுரப்பியானது இவர்களின் சமூக வாழ்கையை பெரிதும் பாதிக்கின்றது. இதற்கு நிவாரணமாக இச்சுப்பியை வெட்டி அகற்றிவிட்டு பின்னர் மிருகங்களில் பெறப்பட்டு சந்தையில் விற்பனையாகின்ற தைரொக்ஸின் மாத்திரைகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வாழ்நாள் பூராக உட்கொள்ள வேண்டியிருக்கும். இம்மாத்திரைகள் வயோதிபர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்களில் மிக மோசமான பக்க விளைவு களையும் ஏற்படுத்துகின்றது. இச்சுரப்பியை வெட்டி அகற்றும் இச்சத்திர சிகிச்சையானது மிகவும் அபாயகரமானது. ஏனெனில், இச்சத்திர சிகிச்சையின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படுவதால் இச்சுரப்பியை மருவிக் கொண்டு குரல் வளைக்குச் செல்லும் நரம்புகள் தவறுதலாக வெட்டப்பட்டுவிடலாம். இதனால் நன்கு பேசிக்கொண்டிருந்த நோயாளி சத்திரசிகிச்சையின் பின்னர் கதைக்க முடியாமல் கூட ஆகிவிடும்.

மற்றும், இதன்போது தைரொக்ஸின் சுரப்பியின் நான்கு மூலைகளிலும் நான்கு பட்டன்கள் போல் அமைந்துள்ள புடைக்கேடையப் போலிச்சுரப்பியும் வெட்டி அகற்றப்பட்டுவிடக்கூடும். இவ்வாறு அகற்றப்படுமெனில் இச்சுரப்பியால் சுரக்கப்படும் ஓமோன் உடலில் அற்றுப்போவதால் கல்சியம் குறைவடைந்து வலிப்பு, கைவீக்கம் மற்றும் தசைச்சுருக்கம் என்பன ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்பங்களில் தைரொக்ஸினுடன் சேர்த்து கல்சியமும் வாழ்நாள் முழுவதும் கொடுக்கப்படவேண்டும்.

பகல் காலங்களில் வயலில் வேலை செய்தும், இரவில் ஊர்காவற்படை வீரராகவும் பணி புரிந்து உழைத்து, தனது வயதான அம்மாவையும் பரிபாலித்து வாழ்ந்து வந்த இந்த இளைஞனுக்கு திடீரென எந்த வேலையும் செய்ய முடியாமலும், துப்பாக்கியைக்கூட தூக்கி நடக்க முடியாமலும், வேறு எந்த தொழிலும் செய்ய முடியாமலும் அல்லலுறும் காட்சி அதிர்ச்சியானது. அதாவது எந்த அளவுக்கு எனில் தனது தாய்க்கு உதவிசெய்ய வேண்டிய இந்த இளைஞனுக்கு அவனுடைய வயதான தாய் அவனுக்கு உதவி செய்யும் நிலையை சற்று சிந்தித்துப் பார்ப்போமெனில் பிறவியில் எந்த ஊனமும் இன்றிப் பிறந்த இந்த இளைஞன் இளமைப் பருவத்தை யடைந்து இளமையின் சுகபோகங்கள் அனைத்தையும் நுகர்ந்து கொண்டிருந்த இந்த இளைஞனுக்கு திடீரென ஏற்பட்ட இந்த வயோதிப பன்புகள் அழ்ழாஹ் உடலின் ஆட்சியாளன் என்பதையும் எந்த நேரத்திலும் எதையுமே செய்துமுடிக்கப் போதுமானவன் என்பதையும் உணர்த்துகின்றதல்லவா?

‘மனிதனுக்கு நாம் அருளை அனுபவிக்கச்செய்து பின்னர் அவர்களிடமிருந்து அதை எடுத்துவிட்டால் அவன் நம்பிக்கை இழந்தவனாகவும், நம்மை மறுப்போனாகவும் மாறிவிடுகின்றான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் என்னை விட்டும் தீங்குகள் அகன்றுவிட்டன. என்று கூறுகின்றான். அவன் பெருமிதமும் கர்வமும் கொள்கின்றான்.’ (அல்குர்ஆன் 11:09)

பணம் மற்றும் பதவி படைத்தவர்கள் நான் கஷ்டப்பட்டு உழைத்ததாலும், கண்விழித்துப் படித்ததாலும் மற்றும் எனது திறமையினாலும்தான் இன்று நான் இந்த நிலைமையில் இருக்கின்றேன் என்று அழ்ழாஹ்வை மறந்து மார்தட்டிக் கொள்கின்றார்களே. இவர்கள் சிந்திக்கவேண்டாமா? இவர்களின் தைரொக்ஸின் ஓமோன்களைக் குறைத்து மந்தபுத்தி யுடையவர்களாகவும், சோம்பேறிகளாகவும், கழுத்தில் பெரிய கட்டியுடனும் வீட்டில் முடக்கி வைக்கப் போதுமான அழ்ழாஹ்வையும் மற்றும் அவனது ஆற்றல்களையும் சிந்திக்கவேண்டும்.

‘தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பிவிடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்துவிட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.’ (அல்குர்ஆன்-18:28)

அன்றாடம் தொழில் செய்து சுறுசுறுப்பாக அவர்களின் காரியங்களை முடித்துக் கொண்டு குடும்பங்களை நடாத்துகின்றவர்களும் இன்று தன்னை விட பணம், பதவியால் உயர்ந்தவனைப் பார்த்து இவரைப் போல் என்னையும் ஆக்கியிருக்கக்கூடாதா? என்று இறைவனைக் கடிந்து கொள்வதும் உண்டு. இவர்களுக்கு வழங்கியிருக்கும் ஆரோக்கியம் எனும் அருட்கொடையையும் தம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் ஏன் எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் அவதிப்படும் இந்த இளைஞனின் நிலைமையைக் கூட இவர்கள் சிந்திக்கவேண்டாமா?

எம்மை சுகத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழவைத்து உணவளித்துக் கொண்டிருக்கின்ற அழ்ழாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதுடன் அவனது அருட்கொடைகளை அவன் விரும்புகின்ற விதத்தில் பயன்படுத்தி நற்பேறு பெறுவோமாக.


நன்றி : http://dharulathar.com

Monday, April 12, 2010

அல்குர்ஆன் இற‌க்கி அருளப்பட்டதா? படைக்கப்பட்டதா?

அழ் ஹாபிழ் அபூ அஸ்பாக் அல் அதரி
abuashfaqalathary@gmail.com

”மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.’ (அல் குர்ஆன் 4:174)

மனித குலத்தின் ஈருலக வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக் குர்ஆன் ஜாஹிலிய்யா காலம் தொட்டு இன்றைய நவீனகாலம்வரை ஏற்படுத்திய மாற்றங்களையும், சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்றுவிடும். மனித வரலாற்றில் சாதனை படைத்த சாதனையாளர்களின் பின்னணியில் தாக்கம் செலுத்துவது அல்குர்ஆனின் அறிவூட்டல்தான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இத்தகைய புனிதமிகு வேதம் எவ்வாறு இவ்வுலகிற்கு வருகை தந்தது என்பதில் மனித சமூகத்தில் இரு விதமான கோட்பாடுகள்காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம்களாகிய நாம் எதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக இக்கட்டுரை அலசவிருக் கின்றது. இவற்றில் பூரண தெளிவில்லாமல் நாம் வணக்க வழிபாடுகளை மேற்கொள்வது உப்பில்லா பண்டம் குப்பையில் என்ற பழமொழிக்கு ஒத்ததாகத்தான் இருக்கும். அவைகளை பரத்தப்பட்ட புழுதிகளாகவே நாளை மறுமையில் நாம் காண்போம்.

எனவே அல்குர்ஆனை படிப்பதற்கு முன் அதன் வருகை பற்றிய பூரண தெளிவை ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமென கருதுகின்றேன்.

முஸ்லிம்களாகிய நாம், திருமறைக்குர்ஆன், அருள்புரியப்பட்ட மகத்துவமிக்க இரவை தன்னகத்தே கொண்டுள்ள ரமழான் மாத்தில் இறக்கியருளப்பட்டது எனும் நம்பிக்கைகோட்பாட்டில் வாழ்ந்து வருகின்றோம். அன்றைய ஜாஹிலிய சமூகத்திடம் மூட நம்பிக்கைகள், பெண் குழந்தைகளை குழி தோண்டிப் புதைப்பது இளம்பெண்களை ஆடு மாடுகளைப் போன்று நடத்துவது, மதுபாணங்களை அருந்துவது,தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியோடு மகன்சேர்வது, நிர்வாணமாக நின்று கடவுள் ஆராதனைகளை மேற்கொள்வது, இன, மத வேறுபாடுகள் பார்ப்பது போன்ற இன்னும் பல தீய குணங்கள் மேலோங்கிக் காணப்பட்டது.

இத்தகைய இழி நிலைகளை அவதானித்துக் கொண்டிருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவற்றில் தானும் பங்காளியாகிவிடக் கூடாது என்பதற்காக மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிறா’ எனும் குகைக்குச் சென்று இவற்றிற்கான மாற்று வழிகளை சிந்திக்கலானார்கள்.

பல நாட்களுக்கான உணவுகளை தயார்படுத்திக்கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வானத்தையும், பூமியையும் தொட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு பிரமாண்டமான தோற்றத்தில் ஜிப்ரீல் எனும் மலக்கு திடீரென நபிகளாரை கட்டியணைத்து ‘ஓதுவீராக’ எனக் கூறிய போது தமக்கு ஓதத்தெரியாது என நபியவர்கள் சொல்ல மீண்டும் ‘ஓதுவீராக’ எனக்கூற அப்போதும் தெரியாது என பதிலளித்தார்கள். பிறகு நபியவர்களை மிகவும் இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டு அல் குர்ஆனின் 96வது அத்தி யாயத்தில் இடம் பெறும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காண்பித்தார்கள்.

நபியவர்கள் அதிர்ச்சியுற்று அச்சம் கொண்டவர்களாக தனது மனைவி ஹதீஜாவிடம் வந்து விடயத்தைக் கூறினார்கள். ‘இறைவன் நிச்சயமாக உங்களை இழிவு படுத்தமாட்டான், நீங்கள் உறவுகளை சேர்ந்து வாழுகின்றீர்கள், ஏழைகளுக்கு வாரி வழங்கு கின்றீர்கள், மக்களுக்கு உதவுகின்றீர்கள். எனவே, அழ்ழாஹ் உங்களை கைவிடமாட்டான்’ என ஆறுதல் வார்த்தைகளை கூறினார்கள். பிறகு முந்தைய வேதங்களை திறம்பட கற்றறிந்த தனது உறவினர் வரகாவிடம் நபிகளாரை அழைத்துச் சென்று விடயத்தை முறையிட்டார்கள.

அவர் ‘நீர் இறைவனின் தூதராக நியமிக் கப்பட்டுள்ளீர், உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டு வெளியேற்றும் நிலையை நீர் அடைவீர். ஏனெனில் இதுதான் முன்சென்ற இறைத் தூதர்களின் நிலை என்றெல்லாம் ஆறுதல் படுத்தினார்கள்.’ (நூல்: புஹாரி-3)

இவ்வாறே நபிகளாருக்கு இறைச் செய்தி கொடுக்கப் பட்டது. இவ்வாறு ஆரம்பித்த வஹி 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கி அருளப்பட்டது. இந்த வருகையைக் குறித்து அருள்மறை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்ட தாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.’ (அல்குர்ஆன் 1:185).

மற்றுமொரு வசனத்தில் ‘இதனை நாம் அருள் பாலிக்கப்பட்ட இரவில் இறக்கி வைத்துள்ளோம்.’ (அல்குர்ஆன் 44:2). பிறிதொரு வசனத்தில் ‘இதனை (குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இறக்கி அருளி யுள்ளோம்.’ (அல்குர்ஆன் 97:1).

மேற் கூறப்பட்ட வசனங்களை பார்க்கும் போது அல்குர்ஆனின் வருகையில் ஏதோ முரண்பாடு இருப்பது போன்று தோன்றுகிறது. சிலர் அவ்வாறு சித்தரித்தும் உள்ளனர். எனினும் உண்மையில் இவற்றில் எவ்வித முரண்பாடும் கிடையாது.

அல்குர்ஆன் 44:2ல் கூறப்படுகின்ற அருள்பாலிக்கப்பட்ட இரவு என்பது லைலதுல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவு என்பதை அல்குர்ஆன் 97:1ஆம் வசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த மகத்துவமிக்க இரவு ரமழான் மாதத்தில் உள்ளது என்பதை அல்குர்ஆன் 185:1ஆம் வசனம் உணர்த்தி நிற்கின்றது. எனவே இம்மூன்று வசனங்களையும் கூர்ந்து கவனிக்கும் போது ஒன்றுக்கொன்று விளக்கமாக அமைந்துள்ளதே தவிர முரண்பாடுகள் கிடையாது என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அடுத்து மற்றுமொரு சந்தேகமும் எழ வாய்ப்பு உள்ளது. அதாவது ரமழான் மாதத்தில் ‘லைலதுல் கத்ர்’ எனும் இரவில் அருள்மறை இறக்கியருளப்பட்டதென்றால் ஏனைய காலங்களில் இறக்கியருளப்படவில்லையா? 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டது என்பதுதானே இஸ்லாமிய வரலாறு கூறும் உண்மை?

உண்மையில் இது ஒரு நியாயமான கேள்வியாகும். எனினும் அல்குர்ஆனின் வருகை குறித்து உள்ள அடிப்படையில் எமக்கு தெளிவு கிடைக்குமாயின் இச்சந்தேகம் எழ வாய்ப்பே இல்லை. திருமறைக் குர்ஆனுக்கு இரு விதமான வருகைகள் உள்ளன.

நன்றி : http://dharulathar.com

வீட்டுக்கும் குஷ்டரோகம் வருமாம்! - பைபிள் ஜோக்ஸ்

பைபிளில் முரண்பாடான வசனங்கள், ஆபாசமான வசனங்கள் என்று இருப்பது போன்று ஜோக்கான வசனங்களும் நிறைய கானக்கிடைக்கின்றன.

நாம் உடுத்தும் ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று உளரிவைத்தவர்கள் அடுத்து வீட்டுக்கும் குஷ்டரோகம் வரும் என்று கடவுளின் பெயரால் பைபிளில் உளரிவைத்துள்ளதைப் பாருங்கள்:

நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால், அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத்தோஷத்தைப் பார்க்கப் போகுமுன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய், அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன். அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக் கண்டால், ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து, ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால், தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு, வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும், வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப்பூசவும் கட்டளையிடுவானாக. கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால், ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன். தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும். ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும். வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். ஆசாரியன் திரும்பவந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன். அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று, கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து, குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து, உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும். இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும், வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும், . தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம். குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார். ( லேவியராகமம் 14:34-57 )

கடவுளுடைய சட்டங்களை எப்படிப்பட்ட மடத்தனமான சட்டங்களாக சித்தரித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்களா சகோதரர்களே! மேலே சொன்னது போல் வீட்டுக்கு குஷ்டரோகம் வரும், ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று வேறு எவராவது சொன்னால் 'இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்று சொல்லும் நாம், அதை விட மிக மிக மடத்தனமாக - முட்டாள்தனமாக உளரும் இந்த பைபில் வசனங்களை மட்டும், இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து பரிபாலித்துவரும் இறைவனின் வார்த்தைகள்' என்று எப்படி நம்பமுடியும்? சிந்திக்க வேண்டாமா?
உலகிலேயே அதிகமான நாத்திகர்களை உண்டாக்கிய மதம் எதுவென்றால் அது கிறிஸ்தவமே! காரணம் இது போண்ற மடத்தனமான பைபிள் வசனங்களே! கடவுளே இப்படியெல்லாம் போதிப்பாரா? என்று அவர்கள் தங்கள் சிந்தனையை சுழற்றும்போது தான் 'கடவுளே இல்லை' என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றார்கள். இது போன்ற வசனங்களைப் பார்த்து யாருக்குத்தான் சந்தேகம் வராது சகோதரர்களே!

வீட்டுக்கு குஷ்டரோகம் வந்தால் அந்த இடம் கலர் கலாரா இருக்குமாம், மற்ற சுவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்குமாம், வீட்டுக்கு வந்த அந்த நோயை கண்டுபிடிப்பதற்கான டாக்டர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஆசாரியர்களாம், அவர்களிடம் தான் ட்ரீட்மென்ட எடுக்கச் சொல்லி முறையிட வேண்டுமாம், அப்படி வீட்டுக்கு குஷ்டம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டுமாம், குஷ்ட ரோகம் வந்த அந்த வீட்டில் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களை அசுத்தமான இடத்தில் தான் போடவேண்டுமாம், வீட்டு குஷ்டரோக டாக்டர்களான ஆசாரியன் அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்தும், அதையும் மீறி குஷ்டரோகம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டையே இடித்து அந்த கல்லையும், மரங்களையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடவேண்டுமாம், அப்படி குஷ்டம் வந்த வீட்டுக்குள் எவனாவது சென்றிருந்தால் அவனுக்கு மாலை வரை தீட்டாம், அவன் உடுத்தின உடைகளை கழுவவேண்டுமாம், அந்த வீட்டில் எவனாவது சாப்பிட்டிருந்தால் அவனும் தனது உடையை கழுவவேண்டுமாம், இதை எல்லாம் மீறி அந்த வீட்டுக்கான தோஷம் கழிக்கிறதற்கு சில வழிமுறைகளும் இருக்கின்றதாம்; என்று இப்படி ஜோக்குகள் அடுக்கிக்கொண்டே போகின்றது...

விஞ்ஞானம் வளர்ந்த இந்த இருபதாம் நூற்றாண்டில், பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா? இதை எல்லாம் எப்படி இறைவனின் வசனங்கள் என்று நம்பமுடியும்? சிந்தித்துப் பாருங்கள் கிறிஸ்தவர்களே!

இதே போல் அநேக தமாஷான சட்டங்களும், குறிப்பாக மக்களை மடையர்களாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தும் புரோகிதர்களான - குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த - ஆசாரியர்களுக்கு பிஸினஸ் (Business) வாய்ப்புகளுக்கான வழிகளும் லேவியராகமத்தில் மட்டுமல்லாது பைபிளின் பல இடங்களிலும் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் கடவுளே போதித்ததாக யூத புரோகிதர்கள் எண்ணற்ற பொய்யான சட்டங்களை எழுதிவைத்துள்ளனர். இறைவன் நாடினால், அந்த அத்தனை தவறுகளும் தொடர்ந்து எமது தளத்தில் வெளிவரும்.

அவர்களில் (இஸ்ரவேலர்களில்) ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடம் இருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78)

நன்றி: egathuvam.blogspot.com .

Friday, March 26, 2010

இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 2)

.................................................................. - அபு இப்ராஹீம், சென்னை


சாலாவின் தந்தை யார்?

லூக்கா 3:36 ல் ஆதாம் முதல் இயேசு வரை உள்ள வம்சத்தில் அர்ப்பகசாத்தின் மகன் காயினான். அவன் மகன் சாலா என்கிறார். ஆனால் ஆதியாகமம் 10:24 மற்றும் 11:12 ஆகியவை அர்ப்பகசாத்தின் மகன் சாலாதான் என்கிறது. இடையே உள்ள காயீனான் அங்கே வரமாட்டான் என்கிறது. லூக்கா சொல்வது சரியா பழைய ஏற்பாடு சொல்வது சரியா? எதை நம்புவது? ஏது கடவுள் சொன்னது?

தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் எத்தனைப் பேர்?

தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் 28 தலைமுறையினர் என்கிறார் மத்தேயு (பார்க்க மத்தேயு 1:6-16) ஆனால் லூக்காவோ மொத்தம் 43 என்கிறார் (பார்க்க லூக்கா 3:21-31) எது சரி? லூக்கா சொல்வதா அல்லது மத்தேயு சொல்வதா?


Image and video  hosting by TinyPic
மத்தேயு ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் மொத்தமே 42 பேர்தான் என்கிறார். ஆனால் லூக்காவோ ஆபிரகாமுக்கும் பலதலைமுறைக்கு பிறகுள்ள தாவீதிலிருந்து இயேசுவரையிலுமே 43 பேர் வந்துவிடுகின்றனர் என்று கூடுதலாக கணக்கு காட்டுகிறார். ஒரே தலைமுறையை புதியஏற்பாட்டு எழுத்தாளர்கள் இப்படி மாற்றி மாற்றி முரண்பாடாக சொல்வதை எப்படி கடவுளின் வார்த்தை என்று ஏற்க முடியும்? எது சரி? மத்தேயு சொல்வதா அல்லது லூக்கா சொல்வதா?

(இது போல் இன்னும் பல முரண்பாடுகளும், பல குழப்பங்களும் இந்த வம்சாவளிப் பட்டியல்களில் தொடர்கிறது. நாம் ஆக்கம் நீண்டுக்கொண்டே செல்வதால் தவிர்த்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.)

இயேசு விபச்சாரர்களின் சந்ததியா?

இயேசுவின் வம்சத்தில் வரும் இவ்வளவு குளறுபடிகளும் ஒரு புறம் இருக்க அவரின் வம்சத்தில் வரும் பலர் விபச்சாரர்களாக இருந்ததாக பைபில் கூறுகிறது.

'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்' (மத்தேயு 1:3)

இந்த தாமார், யூதா, பாரேஸ் என்பவர்கள் யார்? இந்த தாமார் என்பவள் யூதா என்பவனின் மகனுடைய மனைவி. அதாவது மருமகள். அவளுடன் யுதா கள்ளத்தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் தான் பாரேஸ் என்று பைபிள் சொல்கிறது. பார்க்க ஆதியாகமம்; 38 : 6 (இந்த மாமனார் மருமகள் ஆபாசக்கதையில் உள்ள குழப்பங்களை படிக்க இங்கே அழுத்தவும்)

அடுத்து அவரது தலைமுறையில் வரும் தாவீது பற்றி மத்தேயு (1 : 6) சொல்லும்போது 'தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்'. இப்படி விபச்சார சந்ததிகள் மூலமாகத்தான் இயேசு பிறக்கின்றார் என்கிறார் மத்தேயு. (நவூதுபில்லாஹ்...) அதேபோல் இயேசுவின் வம்சத்தில் வரும் மற்றொருவர் 'ராகாப்'. (மத்தேயு 1:5) இவள் ஒரு விபச்சாரி என்று பழைய ஏற்பாடு கூறுகின்றது.(பார்க்க - யோசுவா 2:5)

இப்படிப்பட்ட விபச்சார சந்ததிகள் மூலமாக வந்தவர்தான் இயேசு என்கிறது பைபிள். இது ஒரு புறம் இருக்க இப்படிப்பட்ட விபச்சார சந்ததியில் பிறக்கக்கூடியவர்கள் எவரும் பரிசுத்தராக முடியாது, என்றும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு - ஒன்றல்ல இரண்டல்ல, தலைமுறை தலைமுறையாக வர முடியாது என்றும் கூறுகிறது பைபிள்.

'வேசிப்பிள்ளையும் (விபச்சார சந்ததிகள்) கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - உபாகமம் 23:2,3

இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, சாலமோன், இயேசு இவர்களெல்லாம் ஒரு பரிசுத்தராக வரவேமுடியாது என்கிறது பைபிள். (இவர்களெல்லாம் இஸ்லாத்தைப் பொருத்தவரை மிக்க பரிசுத்தவான்கள். இது பற்றி சிறப்புக் கட்டுரை விரைவில்... இறைவன் நாடினால்) கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்படி இயேசு கடவுடைய குமாரன் என்பதை விட்டுவிடுவோம். முஸ்லீம்கள் சொல்வது போல் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதையும் விட்டுவிடுவோம். அவர் ஒரு பரிசுத்தராகக்கூட வரமுடியாது என்கிறது இந்த வமிசாவளிப் பட்டியலும், இந்த கிறிஸ்தவர்களின் புனித பைபிளும். இதுதான் தான் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் மூலமும் பைபிளின் எழுத்தாளர்கள் கொடுத்துள்ள இயேசுவின் வம்சாவளிப்பட்டியல்கள் உணர்த்தும் மறுக்க முடியாத உன்மை.

இது மட்டுமல்ல இப்படி விபச்சார வம்சத்தில் வந்த - தானும் விபச்சாரம் செய்த (?) தாவீது தீர்க்கதரிசி எழுதிய பழையஏற்பாட்டில் உள்ள நூல்களான சங்கீதம் என்ற புத்தகம், சாலமோன் எழுதின நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு, போன்ற புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? காரணம் இவர்களெல்லாம் விபச்சார சந்ததிகளாயிற்றே? அதே போல் இயேசுவே பைபிளின் உபாகமம் 23:2,3ன் படி பரிசுத்தராக முடியாது எனும்போது அவரைப்பற்றி எழுதிய புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? இப்படி இந்த யூத எழுத்தாளர்கள், தீர்க்கதிரிகளான - நல்லோர்களான - தாவீது, சாலமோன் போன்ற இன்னும் பல பரிசுத்தவான்கள் மீது இட்டுக்கட்டி எழுதிய கட்டுக்கதைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பாhத்தீர்களா? சகோதரர்களே! பைபிளில் பல புத்தகங்கள் இறைவேதம் என்றத் தகுதியை இழக்கும் நிலை ஏற்படும். நீங்கள் பைபிளில் வரும் யூதா தாமார் கள்ள உறவுக் கதைகளை (ஆதியாகமம் 38:6) , தாவீது உரியாவின் மனைவியோடு நடத்தியதாகச் சொல்லப்படும் விபச்சாரக்கதைகளை (2 சாமுவேல் 11:1-8) கர்த்தரால் அருளப்பட்ட வசனங்களாக நம்பினால் அது வேறு ஒரு விதத்தல் உங்கள் நம்பிக்கைகளுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் உணரவேண்டும்.

இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இப்படி தலைமுறைத் தலைமுறையாக ஒருவருக்கு பாவம் தொடரும் என்று இஸ்லாம் ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி தொடராது - அது மடத்தனமான கொள்கை என்று சத்தியமார்க்கமான இஸ்லாம் போதிக்கின்றது. (பார்க்க அல்குர்ஆன் 2 : 233, 281, 286) இப்படி சொல்வது முட்டாள்தனமான வாதமும் கூட. யாரோ செய்யும் தவறுக்கு யாரையோ தண்டிப்பது என்பது மடத்தனமாக கொள்கை என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கின்றது. ஆனால் கிறிஸ்தவமோ, நம் முன்னோர்கள் செய்யும் பாவம் சந்ததி சந்ததியாக தொடரும் என்கிறது. கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடான ஆதிபாவம் - Original Sin என்பதே 'ஆதாம் செய்த பாவம் சந்ததி சந்ததியாய் தொடர்கிறது' என்பது தானே. இப்படிப்பட்ட நம்பிக்கை இவர்களிடம் இருக்கும் நிலையில், நாம் மேலே கூறியுள்ள விவரங்களையும் அதற்கு ஆதாரமாக காட்டியுள்ள உபாகமம் 23:2,3 வசனத்தையும் கிறிஸ்தவர்கள் மறுத்தார்களேயானால், அவர்கள் ஆதிபாவம் என்னும் கிறிஸ்தவத்தின் ஆணிவேரையே மறுத்தவர்களாவர்கள். ஆதிபாவம் உள்ளதா? அல்லது இல்லையா? ஆதிபாவம் என்னும் கொள்கை சரிதான் என்றால் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் படி இயேசுவும், தாவீதும், சாலமோனும் பாவிகளாகிவிடுவார். இவர்களளெல்லாம் பாவிகள் இல்லை என்றால் ஆதிபாவம் தவரானதொன்றாகிவிடும். எது சரி?

தந்தை இல்லாமல் பிறந்தவருக்கு தந்தைவழி வம்சாவழி ஏன்?

கிறிஸ்தாவர்களிடம் கேட்பது இது தான். தந்தை இல்லாமல் பிறந்தார் என்பதற்காக இயேசுவைக் கடவுளின் குமாரன் (?) என்றும் அதனால் அவருக்கு தனிச்சிறப்பே உள்ளது என்றும் ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தைவழி வம்சாவழியை சொல்லுவதன் அவசியம் என்ன? வரலாற்றைச் சொல்லுகிறோம் என்றப்பெயரில் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தை வழி வம்சத்தை யாராவது சொல்வார்களா? எந்த ஒன்றுக்கும் உதவாத இந்த வம்சாவழியை சொல்லும் கடவுள் (?) முரண்பாடில்லாத வகையிலாவது சொல்ல வேண்டாமா? இந்த வம்சாவழியை சொல்லுவதால் உங்கள் பைபிள் உலகமக்ளுக்கு என்ன நல்வழிகாட்டவருகின்றது? இவைஅனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் தனது குமாரனுடைய வம்சத்தை முரண்பாடாக சொல்லுவாரா? இந்த வம்சாவழியால் பைபிளின் பல புத்தகங்களின் புனிதம் கெடுகின்றதே இது ஏன்?

ஓன்றுக்கும் உதவாக இந்த வம்சாவளிப்பட்டியல்கள் கூறும் வசனங்கள் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வசனங்கள் பழையஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் சேர்த்து வருகின்றது. ஆங்காங்கே அவன் அவன் மகன், இவன் இவன் மகன், இவனை இவன் பெற்றெடுத்தான் அவனை அவன் பெற்றெடுத்தான் என்பது போன்ற நடையில் வரும் வசனங்கள் ஏராளம். இதனால் யாருக்கு என்ன பயன்? ஒரு பிரயோஜனமும் இல்லை.

பொதுவாக வேதவாக்கியங்கள் எதற்காக அருளப்பட்டது என்பது குறித்து பொதுவான நிபந்தனைகளை சொல்வதைவீட பைபில் அது பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்தோமேயானால் இது போன்ற வம்சாவளி பற்றிய வசனங்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது புலனாகிவிடும். வேதவாக்கியங்கள் அருளப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி பைபில் சொல்லுவதை பாருங்கள் :

'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.- 2 திமெத்தேயு 3:16-17

அதாவது அந்த வேதவசனங்கள் :

1. உபதேசத்திற்கும்
2. கடிந்துக்கொள்ளுதலுக்கும்.
3. சீர்திருத்தலுக்கும்...
4. நீதியைப் படிப்பித்தலுக்கும்...

உதவக்கூடியது என்று சொல்லுகிறது பைபில்.

பைபிளில் வரும் எல்லா வமிசாவளிப்பட்டியல்களை கூறும் வசனங்களை, இந்த பைபிள் வசனத்தோடு உரசிப்பாருங்கள். இதில் ஆயிரக்கனக்கான குழப்பங்களும் முரண்பாடுகளும், அசிங்கமான மரபுகளும் நிறைந்த இந்த வமிசாவளிப் பட்டியல் வசனங்களால் என்ன பயன்? இந்த நான்கு தகுதியில் எந்த தகுதிகளோடு இந்த வம்சாவளிப்பட்டியல் வசனங்கள் ஒத்துப்போகின்றது? அது மட்டுமல்ல புதிய ஏற்பாட்டின் மூலகர்த்தா பவுல் அவர்களே, இந்த வம்சவரலாறு பட்டியல்களெல்லாம் ஒன்றுக்கும் உதவாது, அதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறுகின்றார்.

புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு. அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். (தீத்து 3:9)

வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,... (1 திமோத்தேயு 1:3)

இங்கே வம்சாவளிப்பட்டியல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பவுல் சொன்னதும் கடவுளால் அருளப்பட்டதாம், அங்கே மத்தேயுவும் லுக்காவும் இன்னும் பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கலெல்லாம் சொல்லும் அந்த வம்சாவழிப்பட்டியள்களும் கடவுளால் சொல்லப்பட்டதாம். இது பச்சை முரண்பாடாக தெரியவில்லையா?

அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்களே! இவ்வுலகமக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவன் தனது இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக குர்ஆன் எனும் இறுதி இறைவேதத்தை அருளியிருக்கின்றார். இயேசுவைப் பற்றியும் அவரது முன்னோர்களான தாவீது, சாலமோன் இன்னும் பல தீர்க்கதரிசிகள் - இறைத்தூதர்கள் அனைவரும் பரிசுத்தாவன்கள் - அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் என்று பறைசாட்டுகிறார் இறைவன். யூதர்களும் பைபிளின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இயேசுவுக்கும் அவனது மற்ற பரிசுத்தவான்களுக்கும் எற்படுத்தியுள்ள களங்கங்களைத் துடைத்து அவர்களின் உன்மைநிலையை விளக்குவதற்காக வந்த இந்த திருக்குர்ஆனை மனதுறுகிப் படியுங்கள். கண்டிப்பாக நேர்வழி அடைவீர்கள். இறைவன் நம் அனைவரையும் நேரான வழியில் நிலைநிறுத்துவானாக.

நன்றி :http://egathuvam.blogspot.com

இதன் முதல் பாகத்தை பார்ப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.
தாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...?

பைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு !
------------------------------------------------- - அபூ இப்ராஹீம்

இந்த மனிதசமுதாயத்திற்கு நல்வழிக் காட்ட வந்த இறைத்தூதர்களான தீர்க்கதரிசிகள் - நல்லோர்கள் பற்றி வரும் சம்பவங்களின் இடையிடையே - சில அபத்தமான - ஆபாசமான - அசிங்கமான வர்ணனைகளுடன் கூடிய இட்டுக்கட்டப்பட்ட கதைகளும் பைபிளில் நிறைந்துக் காணப்படுகின்றன. காரணம் அதைப் பாதுகாக்க வேண்டிய யூதர்கள் தங்கள் மனோஇச்சைப்படி தீர்க்கதரிசிகள் மீதே அபான்டமான - பொய்யான கதைகளை இட்டுக்கட்டியதால் தான் இப்படிப்பட்ட ஆபாசக் கதைகள் நிறைந்து காணப்படுகின்றன.

யூதர்களின் இப்படிப்பட்ட அவதூரான கதைகளுக்கும், அபத்தமான வரலாற்று திரிபுகளுக்கும் பலியான நல்லேர்களில் தாவீது தீர்க்கதரிசியும் ஒருவர். புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு கூட இயேசுவை அறிமுகப்படுத்தும் போது 'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு' (மத்தேயு 1:1) என்று தாவீதை மையப்படுத்தி இயேசுவை அறிமுகப்படுத்தும் அளவுக்கு தாவீது ஒரு மிகச் சிறந்த தீர்க்கதரிசியாக அன்னைறய மக்களால் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும் போது 'இவர் ஒரு மிகச்சிறந்த தீர்க்கதரிசி என்றும் ஒழுக்க சிலர்களான நல்லோர்களில் ஒருவர்' என்றும் சாண்று பகர்கிறது.

'தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம் - அதற்கு அவ்விருவரும்: 'புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் - 27:15)

இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார். (அல்குர்ஆன் 38:17)

இப்படிப்பட்ட பல நற்பெயருக்கு சொந்தக்காரரான - பரிசுத்தரரான - தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி யூத எழுத்தாளர்கள் செய்துள்ள கற்பனைக் கதையையும் அதனால் அது இடம் பெற்றுள்ள பைபிலின் புத்தகங்களுடைய புனிதம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதையும் சற்று அளசுவோம்.

தாவீது ஒரு தரங்கெட்ட - ஒழுக்கங்கெட்ட செயலைச் செய்தார் என்று ஒரு கதை பைபிளில் வருகின்றது.

1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். 2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். 3. அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். 4. அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான் அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். 5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள். (2 சாமுவேல் 11 : 1 - 5)

ஒரு தீர்க்கதரிசி - மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஒருவர் - இறைவழியில் ஆட்சி நடத்தும் ஒரு ஆட்சியாளர் என்ற நற்பெயருக்கு சொந்தக்காரின் பெயரில் யூத எழுத்தாளர்கள் இட்டுக்கட்டியுள்ள கதையைப் பார்த்தீர்களா கிறிஸ்தவர்களே!

ஒரு அன்னியப்பென்ணை - அதுவும் தனக்காக - தனது நாட்டுக்காக - தான் அனுப்பிய படையில் - எதிரி நாட்டவரை எதிர்த்து போரிட சென்ற ஒரு உன்மையாக போர்வீரனுடைய மனைவியை - தெரிந்திருந்தும் வேண்டும் என்றே அப்பெண்னை தவறான கண்னோட்டத்தோடு பார்த்தது மட்டுமல்லாமல் அவளை அழைத்து விபச்சாரமும் செய்தார் என்று பைபிளில் எழுதிவைத்துள்ளனர்.

ஒரு புனிதர் மீது அபாண்டமான - இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதையை இந்த யூத எழுத்தாளர்கள இதோடு நிருத்தினார்களா? என்றால் இல்லை. அதைத் தொடர்ந்து அவர் மேலும் மேலும் அடுக்கடுக்கான துரோகங்களைக் (?) செய்தாகவும் எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள் :

6. அப்பொழுது தாவீது: எத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான் அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான். 7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். 8. பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது. 9. ஆனாலும் உரியா தன் வீட்டுக்குப் போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூடப் படுத்துக்கொண்டிருந்தான். 10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். 11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். 12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான் அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமிலே இருந்தான். (2 சாமுவேல் 6 - 12)

நல்லோர்களிள் ஒருவரான தாவீது மேலும் மேலும் தவறு செய்ததாக பைபிளில் இந்த வசனங்களின் மூலம் இட்டுக்கட்டப்பட்டுள்ளது.

தனது படைவீரனின் மனைவியை வேண்டுமென்றே தெரிந்தும் அவளோடு விபச்சாரம் புரிந்ததோடு மட்டுமல்லாமல், அவள் தாவீதால் கற்பம் அடைந்து விட்டால் என்று தெரிந்ததும் அதை மறைப்பதற்காக - போர்க்களத்தில் இருந்த அவளின் கனவனான உரியாவை அழைத்து வந்து அவளோடு உடளுறவு கொள்ள வைத்து, அதன் மூலம் தாவீதால் உன்டான குழந்தை - உரியாவுக்கு பிறந்ததாக சொல்வதற்கு சூழ்சி செய்த ஒரு கொடியவர் என்றும் இதை அறியாத உரியா தாவீதுக்கு மிகவும் விசுவாசியாக இருந்தாகவும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. அதன் பிறகு தாவீது என்ன செய்தார்? அதையும் யூத எழுத்தாளர்கள் இப்படி கதை எழுதி வைத்துள்ளனர்:

13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான். ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக் கொண்டான். 14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். 15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். 16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். 17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள் ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். 18. அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி, 19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது, 20. ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டினத்திற்கு இத்தனை கிட்டப் போய் யுத்தம பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ? 21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு எந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான் நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். 22. அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து, 23. தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம். 24. அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின் மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள் உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான். 25. அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்பட வேண்டாம் பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும் நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான். 26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். 27. துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது. (2 சாமுவேல் 11: 13-27)

இந்த அளவுக்கு ஒரு கொடுமையாமையான ஆட்சியாளராக - கொடூரமணம் படைத்தவராக - சூழ்ச்சிக்காராக - தனக்காக போர்க்களத்திற்குச் சென்ற ஒரு உன்மையான வீரனின் மனைவியை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் அதை மறைப்பதற்காக செய்த சூழ்ச்சியில் அவன் கணவன் விழவில்லை என்பதால் அவனை மீண்டும் போர்களத்திற்கு அனுப்பி கொல்லப்பட வைத்த கொலைகாராகத் தான் இந்த பைபிள் - கர்த்தரால் மக்களுக்கு நல்வழிப்படுத்த வந்த தாவீது தீர்க்கதரிசியைக் - காட்டுகின்றது. இன்றைய நடையில் சொல்வதென்றால் இ.பி.கோ சட்டத்தின் படி விபச்சாரம், கற்பழிப்பு, சதிதிட்டம் தீட்டுதல், கொடூரமாக கொலை செய்தல், நாட்டுக்கு துரோகம் செய்தல், தான் எடுத்துள்ள இரகசிய காப்பு பிரமானத்துக்கு மாறாக நடத்தல் இன்னும் எத்தனைவிதமான குற்றங்கள் இருக்கின்றதோ அவை அனைத்து குற்றத்தையும் ஒரு சேர செய்த கொடியவராகவும், இப்படிப்பட்டவருக்கு எவ்வளவு கொடுமையான தண்டனைக் கொடுத்தாலும் அது தகும் என்று சொல்லும் அளவுக்கு, அத்தனை தவறுகளையும் ஒரு தீர்க்கதரிசி - கடவுளின் பெயரால் மக்களைத் நல்வழிப்படுத்த வந்த ஒரு தீர்க்கதரிசி செய்தார் என்று எழுதிவைத்துள்ளனர்.

இந்த தீர்க்கதரிசி செய்த இந்த அநாகரிகமான - கொடூரமான செயல் - கடவுளின் பார்வைக்கு பொல்லாததாயிருந்ததாகவும் பைபிலிலேயே சொல்லப்பட்டுள்ளது. (பார்க்க 2 சாமுவேல் 11:27)

கடவுளுக்கு இந்த செயல் பொல்லாப்பாகத் தெரிந்ததாக சொல்லப்பட்டுள்ளதே அப்படிப்பட்ட இந்த கேடுகெட்ட செயல்களையெல்லாம் உன்மையிலேயே தாவீது செய்திருப்பாரோயானால் இந்த கொடுஞ்செயலுக்கு அன்றையக்காலத்தில் என்ன தண்டனை இருந்ததோ அந்த தண்டனையின் படி தாவீது தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?

அன்றைய காலத்தல் ஒருவன் அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்தால் என்ன தண்டனை என்று பைபிளே சொல்கின்றது :

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள். (லேவியராகமம் - 20:10)

கடவுள் மாமா வேலை செய்பவரா?


தாவீது பற்றிய இந்தக் கதை உன்மை என்றால் கடவுளின் - பைபிளின் - க்குற்றவியல் சட்டத்தின்படி கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இந்த தவீதுக்கு கடவுள் கொடுப்பதாகச் சொன்ன தண்டனை என்ன?

அதையும் பைபிளே சொல்கின்றது?

'கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்' (2 சாமுவேல் 12: 11 - 12)

எந்த அளவுக்கு கடவுளை கேடுகெட்டவராக - தரம் தாழ்ந்தவராக - மாமா வேலைப் பார்ப்பவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா? தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்கு (?) கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய தண்டனையான மரணத்தண்டனையை கடவுள் நிறைவேற்றாதது மட்டுமின்றி அதற்கு வேறு ஒரு தண்டனையின் மூலம் கடவுள் - தாவீதின் மகள்களைக் மற்றவனுக்கு கூட்டிக்கொடுக்கும் தண்டனையை கொடுப்பதாகச் சொன்னார் என்ற சொல்கின்ற அளவுக்குத் துணிந்தவர்கள் தான் இந்த யூத எழுத்தாளர்கள்.

ஆதாவது தாவீது செய்த இந்தச் செயல்களுக்கான தண்டனையாக, ஊரார் முன்பாக தாவீதுடைய மகள்களை கடவுளின் ஆணைப்படி சிலர் கற்பழிப்பார்கள் என்று கடவுள் சொன்னாராம். எந்த அளவுக்கு கடவுளை கேவளமானவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே.

ஒரு குற்றவியல் சட்டம் - அதுவும் கடவுளால் வழங்கப்பட்ட - அன்றைய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட சட்டம் நடைமுறையில் இருக்க - அதற்கு மாற்றமாக அந்தச்சட்டங்களை கேளி செய்வது போல் அசிங்கமான செயலை செய்ய கடவுள் தூண்டினார் - கூட்டிக்கொடுக்கும் ஒரு சட்டத்தை சொன்னார் - என்று எழுதிவைத்துள்ளனர். இதை எப்படி எழுத மணம் வந்தது இவர்களுக்கு? ஒரு விபச்சாரகனை தண்டிக்க நூறு விபச்சாரகனை கடவுளே உருவாக்கினார் என்று கடவுளுடைய வேதத்திலேயே திரித்து எழுதும் தைரியம் எப்படி வந்தது இவர்களுக்கு? கிறிஸ்தவ சகோதரர்கள் இதை சிந்திக்க வேண்டும். இந்த ஆபாபசமான - அபாண்டமான வரலாற்றுத் திரிபுகளை தான் நீங்கள் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் கிறிஸ்தவ சகோதரர்களே. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக, முதலிலே தாவீது தீர்க்கதரிசியின் மீது கலங்கம் கற்பித்த யூத எழுத்தாளர்கள் கடைசியில் கடவுளின் வேதத்திலேயே கடவுளை கேவலப்படுத்தி எழுதியிருப்பதை பார்த்தீர்களா கிறிஸ்தவ சகோதரர்களே!

இந்தக் கதை பொய் என்று எப்படி சொல்கின்றீர்கள் என்று உங்களுக்கு சந்தேகம் எழழாம். இந்தக் கதை உன்மையிலேயே கடவுளால் அருளப்பட்டதாக இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது. அதை பைபிள் ஒளியிலேயே சற்று அளசுவோம்.

காரணம் 1 : ஒரு பரிசுத்தமான தீர்க்கதரிசி - மக்களுக்கு நல்வழிக்காட்ட வந்த தீர்க்கதரிசி - இறைவனுடைய சட்டத்தின் படி ஆட்சி செய்த தீர்க்கதரிசி இந்த இழிவான காரியத்தில் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் புத்தகங்கள் இன்றைக்கும் பைபிளிலேயே ஒரு புனித புத்தகமாக இருக்கும் அளவுக்கு ஒரு பரிசுத்தர் இந்த அளவுக்கு கொடியவராக இருந்திருக்க மாட்டார்கள். கண்டிப்பாக இது சிலரால் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். இது முதல் காரணம்.

காரணம் 2 : நாம் மேற்கூறியுள்ள படி ஒருவன் அடுத்தவன் மனைவியிடம் விபச்சாரம் செய்தால் அவன் கொள்ளப்பட வேண்டும் என்பது சட்டம் அன்றைய காலத்தில் இருந்த குற்றவியல் சட்டம் (பார்க்க லேவியராகமம் - 20:10) ஆனால், அடுத்தவன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டது - தனது படையிலேயே தனக்காக போரிடசென்றவனுடைய மனைவியுடன் விபச்சாரம் செய்தது - தனது படைவீரனுக்கு துரோகம் செய்தது, விபச்சாரத்தின் மூலம் தாவீதால் பிறக்கப்போகும் குழந்தையை உரியாவின் தலையிலேயே கட்ட நினைத்தது, இந்த சூழ்சிக்கு பலியாகாத உரியாவை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்து அதை நிறைவேற்றியது போன்ற - கடும் குற்றத்தை செய்த தாவீதுக்கு - எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட தண்டனையான மரணத் தண்டனையை கடவுள் கொடுக்க வில்லை என்பது போல் இந்த சம்பவத்தின் மூலம் காட்டப்படுகின்றது. (அதாவது கடவுள் தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு விதமாகவும், தனக்கு வேண்டாதவர்களுக்கு வேறு ஒரு விதமாகவும் நடந்துக் கொள்வர் என்பது போல் காட்டப்படுகின்றது.) தாவீது இந்தத் தவறைச் உன்மையிலேயே செய்திருந்தால் கண்டிப்பாக அந்த சட்டத்தின் படி கடவுள் தண்டித்திருக்க வேண்டுமே. அவ்வாறு செய்யாமல் அவரை கடவுள் தப்பவிட்டதாக காட்டப்படுகின்றது. இது இரண்டாவது காரணம்.

காரணம் 3: கடவுள் வழங்கியுள்ள குற்றவியல் சட்டங்கள் என்பது சக்தியும் பலமும் உள்ளது என்பது பைபிளின் சான்று. (சங்கீதம் 19:7) அவரது சட்டங்கள் மனித சமுதாயத்தில் குற்றங்களை ஒழித்து மக்களை நிம்மதியாக வாழச்செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட கடவுளின் சட்டங்களை கேளிக்குறியவை என்பது போல் இங்கே காட்டப்படுவடுவதுடன், 'கடவுள் மாமா வேலைப்பார்ப்பவர் - கூட்டிக்கொடுப்பவர்' என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசனங்கள் சாத்தானின் தூண்டுதலால் திரித்து எழுதப்பட்டிருக்குமே யொழிய கடவுளால் அருளப்பட்டிருக்காது என்பதுதான் மறக்க முடியாத உன்மை.

காரணம் 4 : 2 சாமுவேல் 12: 11 - 12 வசனங்களின் மூலம் கடவுளைத் தரங்கெட்டவராகவும் - மாமா வேலைப்பார்ப்பவராகவும் - கூட்டிக்கொடுப்பவராகவும் காட்டப்படுகின்றது. அதாவது ஒரு விபச்சாரத்திற்குரிய தண்டனையால் அந்த விபச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு பதிலாக பல விபச்சாரகர்களை ஏற்படுத்தி கேவலமான - நகைப்பிற்குறிய சட்டங்களை கொடுப்பவர் தான் கடவுள் என்று காட்டப்படுகின்றது. இது போன்ற வசனங்களை கடவுள் அறிவிக்க மாட்டார் என்று பைபிளே சொல்கின்றது.

சங்கீதம் 33:4 : கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

For the word of the LORD is right; and all his works are done in truth. (kjv)

அது மட்டுமல்ல இது போண்ற அசிங்கமான சட்டங்களை துன்மார்க்கன் தான் சொல்வான் என்றும் பைபிளே சான்று பகர்கின்றது.

துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும். அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது (சங்கீதம் 33 : 1-2)

இவற்றை வைத்துப் பார்க்கும் போது கண்டிப்பாக இந்த சம்பவம் அந்தக் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தாவீது தீர்க்கதரிசியின் மீது கடவுளின் பெயரால் இட்டுக்கட்டித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பது நிரூபணம்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கேவலமான கதையால் பைபிளே கேள்விக்குறியாக்கப்படுவது தான் வேதனையிலும் வேதனை.

'வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - (உபாகமம் 23:2)

இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, அவரது மகன் சாலமோன் மற்றும் அவரின் சந்ததியின் மூலம் பிறந்த இயேசு உட்பட பரிசுத்தவான்கள் யாவரும் கடவுளுடைய சபைக்கு வரமுடியாதாம் - அதாவது அவர்களெல்லாம் பரிசுத்தவானாக - கடவுள் ஊழியம் செய்தத் தகுதியற்றவர்களாகிவிடுவர் என்கிறது பைபிள். விபச்சாரம் செய்பவருக்குப் பிறக்கும் ஒருவர் இருவரல்ல.. பத்து தலைமுறை யானாலும் வரமுடியாது என்கிறது பைபிள். இந்த தாவீது எழுதின புனித புத்தகங்கள் பைபிளில் உள்ளது. அவரது மகன் சாலமோன் எழுதிய புனித புத்தகங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது. உபாகமம் 23:2 ன் படி இவர்களே பரிசுத்தவான்களாக முடியாது எனும் போது இவர்கள் எழுதிய புத்தகங்கள் எம்மாத்திரம். தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்றல்லவா?

தாவீது பற்றிய இந்தக் வரலாற்றுத் திரிபை நம்பினால் கிறிஸ்தவர்கள் இந்த முடிவுக்குத்தான் வரவேண்டும். அந்த ஒரு கதையை தூக்கி எறிகின்றீர்களா? அல்லது பைபிலையே ஒதுக்கித்தள்ளப்போகின்றீர்களா? நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
பைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை

மறுப்பும்.. விளக்கமும்...
.........................................................
- அபு இப்ராஹீம்


கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் மக்களுக்கு எந்த ஒரு படிப்பினைகளும் இல்லாத - எதற்கும் உதவாத - ஆபாசவர்ணனைகளுடன் கூடிய ஏராளமான ஆபாசக்கதைகள் - நிறைந்து காணப்படுகின்றன என்ற ஆய்வுக்கட்டுரைகளை 'பைபிளில் ஆபாசம்' என்றத் தலைப்பில் நாம் தொடராக கண்டு வருகின்றோம்.

இதற்கு முன் 'கிறிஸ்துவம்' பற்றி நாம் எழுதிய கட்டுரைகளை காண இங்கே சொடுக்கவும்.

கடவுளின் வேதம் என்பது எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாறாக - அசிங்கமான கற்பனைக்கதைகள் - ஆபாசம் நிறைந்த கதைகள் - பைபிளில் நிறைந்துக் காணப்படுவதற்கு காரணம், அக்காலத்தில் வாழ்ந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போனப் போக்கில் - கடவுளுடைய பெயரால் - அவரது தீர்க்கதரிசிகள் - நல்லோர்கள் - பலரின் பெயரால் இட்டுக்கட்டிய பொய்க்கதைகளை, கடவுளுடைய வேதத்திலேயே உட்சொருகி, அதை சீரழித்ததால் தான் இன்றைய பைபில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கதைகள் கடைசியில் கடவுள் கொள்கைக்கே பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்து விட்டது என்பதுதான் அதைவிட வருத்தத்திற்குறிய ஒன்று. அதன் அடிப்படையில் அமைந்த ஒரு கதை - யாருக்கும் - எவருக்கும் - எந்த ஒரு பயனுமற்ற ஒரு கதை - பைபிளில் வருகின்றது. அதை சற்று அலசுவோம்.

இஸ்ரவேலர்களில் ஒருவரான 'யூதா' என்பவரின் சந்ததியினர் மூலமாகத்தான் இயேசு பிறந்தார் என்று புதிய ஏற்பாட்டில் கூறப்படுகின்றது. அதை மத்தேயு பின்வருமாறு கூறுகின்றார். 'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்' (மத்தேயு 1:3) அதவது 'யூதா' பரேசை தாமாரிடத்திலிருந்து பெற்றானாம். அந்த வம்சத்தில் தான் இயேசு பிறந்தாராம். இந்த தாமார் யூதாவுக்கு யார்? மனைவியா? இல்லை நிச்சயிக்கப்பட்டவாரா? அல்லது யூதா தாமாருக்கு திருமணம் முடிக்கும் அளவுக்கு உறவு முறைக்காரரா? கிடையாது. யூதாவுக்கும் தாமாருக்கும் உள்ள உறவு என்ன? பைபிளின் பழைய ஏற்பாட்டிலேயே அந்த ஆபாசக்கதையை விளக்கப்படுகின்றது. அதாவது இந்த கேடுகெட்ட விபச்சார சந்ததி மூலம் தான் இயேசு வந்தார் என்று இயேசுவைக் அசிங்கப்படுத்தக்கூடிய கதையை பாருங்கள்:

'அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டான். அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். (ஆதியாகாமம் 38 : 2 - 5)

இது வரை யூதா என்பவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்து வரும்கதையைப்பாருங்கள்.

யூதா தன் மூத்த மகனாகிய 'ஏர்' என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராததென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். (ஆதியாகமம் - 38 : 6 - 10)

இங்கே யூதா ஒரு செயலைச் செய்தாக சொல்லப்படுகின்றது. அதாவது தனது மூத்த மகனும் தாமாரின் கனவனுமான ஏர் என்பவன் பொல்லாதவனாக இருந்தானாம். ஆதனால் அவனைக் கடவுள் அழித்துப் போட்டாராம். அந்த 'ஏர்' என்பவனுக்கு மகன் இல்லாததால் அவனது மனைவியை தனது இரண்டாவது மகனை திருமணம் செய்து அவளை வைத்து ஒரு பிள்ளைப்பெறு என்று சொன்னதாகவும், அவனும் அவளோடு உடலுறவு கொண்டுவிட்டு, இவனது 'விந்து' அவளுள்ளே சென்றுவிடாமல் வெளியே எடுத்து விட்டு - அதை 'வேஸ்ட் பண்னிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அவன் செய்தது கடவுளுக்கு பொல்லாப்பாய் இருந்ததாம். இந்தக் கதையால் - இந்த விளக்கத்தால் - இந்தச் சமுதாயத்திற்கு என்னப் பயன்? அடுத்து வரும் கதையைப் பாருங்கள் :

'அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான். அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்' (ஆதியாகமம் - 38 : 11)

இப்படி வாக்கு கொடுத்த யூதா அடுத்து செய்த காரியம் என்ன?

'அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில்போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான். அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள்ளூ அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்ள. அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான். அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லைளூ நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்றுமாதம் சென்ற பின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன். இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள். அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது. அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள். அதினாலே அவனுக்கு பாரேஸ் என்று பேரிடப்பட்டது. பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான். அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது. (ஆதியாகமம் 38 : 12-30)

இப்படி போகின்றது ஒரு குடும்பத்தின் விபச்சாரக்கதை. நாம் என்ன கேட்கின்றோம் என்றால் இந்தக் கதையால் இந்த சமுதாயத்திற்கு - இந்த மக்களுக்கு என்னப் பயன்? இதனால் இந்த சமுதாயத்திற்கு கடவுள் சொல்ல வரும் உபதேசம் என்ன? 'தாமார்' போல் தன் மாமனார் என்று தெரிந்தும் விபச்சாரம் செய்ய வேண்டும் என்று சொல்ல வருகின்றாரா? அல்லது யூதாபோல் விபச்சாரியுடன் விபச்சாரம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லவருகின்றாரா? ஓரு குடும்பத்திற்குள் நடந்த இந்த அசிங்கமான கதையால் - மாமனாரும் மருமகளும் செய்த கல்ல உறவை சொல்லுவதன் மூலம் - மைத்துனனும் மைத்துனியும் செய்த உடலுறவை சொல்லுவதன் மூலம் - இந்த மக்களுக்கு என்ன பயன்? ஒன்றும் கிடையாது. ஒரே ஒரு உன்மையைத் தவிர. அதாவது, இந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம் போன போக்கில் கடவுளுடைய வேதங்களை சிதைத்ததோடு, வரலாறு என்றப் பெயரில் - வரலாற்றைப் புறட்டி - அவதூறான - ஆபாசமான கதைகளை எழுதிவைத்து கடவுளின் வேதத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டார்கள் என்பது மட்டும் தான்.

இந்த ஆபாசக் கதையை வேண்டும் என்றே மறுப்பதற்காகவும் - தாங்களிடம் இருக்கும் பைபிளை கடவுளின் வேதம் என்று நம்பிவிட்டோம் என்பதற்காகவும் - எதையாவது எழுதி இந்தக் கதையை நியாயப்படுத்த முனைகின்ற முயற்சியில் - முஸ்லீம் பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக அவதூறுபரப்பிக்கொண்டிருக்கும் சில கிறிஸ்தவ முகமூடிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் சொல்வது பச்சைப் பொய் என்றாலும், அதைச் பொருந்தச் சொல்லியாவது தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திபடுத்தியிருக்கலாம். அவ்வாறல்லாமல் சம்பந்தமில்லாத காலத்துடன் அதைப் பொருத்தி நியாப்படுத்த முயல்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
.

லேவிரட் திருமண முறையும் - யுதா, தாமார் ஆபாசக் கதையும் :

இந்தக் கதையை சில முகமூடிகள் தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக கூறக்கூடிய காரணம் ' லேவிரேட் திருமணம் - Levirate Marriage' என்ற முறையாம். அப்படி என்றால் என்ன? அதையும் அவர்களே விளக்குகின்றனர் :

// ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும்//

இதற்கு என்ன பைபிள் ஆதாரம் என்றால் மோசேக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தின் படி இது நடந்தது என்று ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். பார்க்க உபாகமம் 25 : 5-10. அதாவது இந்த யூதா தாமார் வாழ்வில் நடந்த ஆபாசக் கதைக்கு இந்த வசனத்தில் வரும் சட்டம் தான் காரணமாம். அதையும் அந்த முகமூடிகளே விளக்குகின்றனர் :

//இந்த 'லேவிரேட் திருமணம்' முறைதான் இந்த தாமார் வாழ்விலும் நிகழ்ந்தது //

எப்படிப்பட்ட பச்சைப்பொய்யை இட்டுக்கட்டுகின்றனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே! இப்படி பொய்யை இட்டுக்கட்டி சமாளிப்பதென்பது இவர்கள் இரத்தத்தில் ஊரிய ஒன்று.

இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்காக எந்தக்காலத்திலேயோ நடந்த சம்பவத்தை எந்தக் காலத்திலேயோ கொடுக்கப்பட்ட சட்டத்துடன் முடிச்சு போடுகின்றனர் என்று பார்த்தீர்களா?

பைபிளின்படி மோசேக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த 'லேவிரேட் திருமணம்' என்ற முறையை மோசேப் பிறப்பதற்கும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த யூதா தாமாரின் இந்த ஆபாசக்கதையுடன் எப்படி ஒத்துப்போகும்? ஒரு பொய்யைச் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா? பைபிளின்படி மோசே பிறந்ததோ கி.மு. 1576. யூதாவின் காலமோ கிட்டத்தட்ட கி.மு 1810 ஆக இருக்கலாம் (அல்லது ஒரு சில வருடங்கள் முன்னும் பின்னும் இருக்கலாம்) எப்படியாயினும் மோசே பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவுக்கு அவருக்கு பின் வாழ்ந்த மோசேயின் சட்டம் எப்படிப் பொருந்தும்? இந்த வாதம் இவர்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா? இந்த அசிங்கமான - யூதா தாமரின் இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்கு ஒரு அளவு வேண்டாமா?

ஒரு வாதத்திற்காக அவர் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், லேவிரட் திருமணமுறைப்படி ஒரு பெண்ணிற்கு குழந்தை இல்லாத நிலையில் அவளது கணவன் இறந்துவிட்டால் அவளின் கணவனின் கூடப்பிறந்தவர்கள் அவளோடு உடலுறவுக்கொண்டு அதன் மூலம் குழந்தைப் பெற்று தனது அண்ணணுக்கு சந்ததியை உருவாக்கலாமாம். அப்படித்தான் அந்த முகமூடி விளக்கமளித்துள்ளார்.

//ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும். //

இந்த சட்டத்தின் படி பார்த்தால் தாமாருடன் யூதாவின் மகனான 'ஓனான்' செய்த செலைத்தான் நியாயப்படுத்தலாம். யூதா தனது மருமகள் (தனது மகனின் மனைவி) தாமாருடன் செய்த இந்த விபச்சாரம் எப்படி இந்த சட்டத்துடன் பொருந்திப் போகும்? யூதா இந்தப் தாமாருக்கு மாமனாரே யொழிய மைத்துனன் அல்லவே? எப்படி இந்தக்கதைக்கு இந்த சட்டம் ஒத்துப் போகும் என்று வாதிட முன்வந்தீர்கள்?

அடுத்து இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்த கதைக்கு இந்த சட்டம் ஒத்துப்போகாது. அதாவது மோசேக்கு கொடுத்த இந்த 'லேவிரட் திருமணம்' என்ற சட்டத்தின்படித்தான் இந்த செயல் நடந்தது என்றால், அதே மோசேக்கு திருமணமானவளுடன் விபச்சாரம் செய்தால் மரணத்தண்டனை விதிக்க வேண்டும் - ஊர் மக்கள் முன் கல்லால் அடித்து கொள்ளப்படி வேண்டும் என்பது சட்டம் :

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள். (லேவியராகமம் - 20:10 மற்றும் உபாகமம் 22:21-24)

எந்த மோசேயின் சட்டத்தின் படி இந்த தாமாரின் சம்பவத்தை நியாயப்படுத்துகின்றீர்களோ அதே மோசேயின் சட்டத்தின் படி யூதாவும் - தாமாரும் செய்த விபச்சாரத்தினால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டு - கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே? ஆனால் அப்படி செய்யப்படவில்லை. காரணம் யூதா வாழ்ந்த காலம் வேறு மோசே வாழ்ந்த காலம் வேறு. யூதாவுக்கு மோசேயின் சட்டப்படி 'லேவிரட் திருமணமுறை' ஒத்துப்போகும் என்றால் விபச்சாரத்திற்கான மரணத்தண்டனையும் ஒத்துப்போகும். எனவே இந்த ஆபாசக் கதைக்கு எத்தனைக் காரணங்களைக் கூறு நியப்படுத்த முயன்றாலும் அது தவறே. இந்த ஆபாசமான கதையால் பைபிளுக்கு மட்டுமல்ல இயேசுவுக்கே கேவலம்தான். காரணம் கேடுகெட்ட இந்த விபச்சாரத்தில் பிறந்த சந்ததி மூலம் தான் அவர் இயேசு வந்தாராம்.

லேவிரட் திருமண முறை இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாதா?

இது ஒருபுறம் இருக்க இதில் இன்னொரு வேடிக்கையும் அடங்கியிருக்கின்றது.

அதாவது யாருக்கு - எந்தக் காலத்தவருக்கு - இந்த லேவிரட் திருமணமுறை பொருந்தாதோ அவருக்கு அதைப் பொருத்தி நியாயப்படுத்தியவர்கள், யாருக்கு இந்த முறைப் பொருந்துமோ அதை மறுத்து எழுதியிருக்கும் வேடிக்கையைப் பாருங்கள்.

மோசேவின் காலத்தில் கொடுக்கப்பட்ட இந்த லேவிரட் திருமண முறை, மோசேவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவிற்கு பொருந்தாது என்று பார்த்தோம். ஆனால் அந்த இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டுமா? என்றால் கூடாது என்கிறார் அந்த கிறிஸ்தவ முகமூடி :

//பழைய ஏற்பாட்டுக்காலத்தில், இப்படி தன் சகோதரரின் குடும்பத்தை நிலைநாட்டாதவனுக்கு சமுதாயத்தில் தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்த கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மனிதர்களாகிய எபிரேயர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு கிடையாது. இப்போது இதை யாரும் (கிறிஸ்தவர்கள்) பின்பற்றுவதில்லை, பின்பற்றவேண்டிய அவசியமில்லை //

இப்படி பச்சைப் பொய்யை இவர் சொல்கின்றார். காரணம் இந்த சட்டம் இந்தக்காலத்தில் இவர்களால் பின்பற்றுவது கிடையாது என்பதால் இதைச் சொல்கின்றார். அதுமட்டுமல்ல, இந்தச் சட்டத்தை இப்பொழுதும் பின்பற்றலாம் என்று இவர் சொன்னால் இன்னும் ஏராளமான குழப்பங்கள் வரும் என்பதால் இப்படி ஒரு கருத்தை திணிக்க முயற்சிக்கின்றார். இது போன்ற சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றத் தேவையில்லை என்று இவர் சொல்வதற்கு என்ன பைபிள் ஆதாரம்? இயேசு நாதர் இதைத் தடை செய்தாரா? கிடையாது. மாறாக (பைபிளின் படி) இந்தச் சட்டத்தை இயேசு நியாயப்படுத்தியது மட்டுமல்லாமல் இந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் அவர் கருத்து. அதை அவரும் பின்பற்றுவாராம்.

இந்தச் சட்டத்தை பற்றி இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது :

'உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்னையதினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள். மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்' (மத்தேயு 22: 23-30)

அதாவது இந்தச் லேவிரட் திருமணச் சட்டத்தை பற்றி கேட்டவர்களிடம், இயேசு அந்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பதில் அளிக்கின்றார். இந்தச்சட்டத்தை அவர் தடை செய்திருந்தால் அங்கேயே இது இனி வரும் காலத்திற்கு பொருந்தாது என்றிருக்கலாம். அது மட்டுமல்ல இது போண்ற சட்டங்களை நான் அழிக்க வரவில்லை என்றும் அதைத் தொடர்ந்து நிறைவேற்றவே வந்துள்ளேன் என்றும் சாட்சியம் அளிக்கின்றார்.

'நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்' (மத்தேயு 5:17)

அதாவது முந்தைய சட்டங்களை இயேசு அழிக்க வரவில்லையாம். தொடர்ந்து நிறைவேற்றத்தான் வந்தாராம். எனவே இந்த லேவிரட் திருமணமுறை இயேசுவின் மேற்குறிப்பிட்ட கருத்தின்படி இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவர்களாக இருந்தால் - இயேசுவின் கூற்றின் படி இந்த சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டும். அதுதான் உன்மை. நீங்கள் வேண்டுமானால் இது தற்போது சட்டமில்லை என்று சொல்லி இயேசுவின் கூற்றை நிராகரிக்கலாம். அது உங்கள் கூற்று தானே யொழிய பைபிளின் கூற்று அல்ல. பைபிளின் படி - இயேசுவின் கூற்றின் படி - இயேசு அந்த சட்டத்தை நியாயப்படுத்தியதன் படி - இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். இந்தச் சட்டம் இன்றைக்கு பொருந்தாது என்பதற்கு பைபிளில் ஆதாரம் கிடையாது. நீங்கள் சொல்வது போல் யூதா தாமாருக்குத் தான் இந்த சட்டம் பொருந்தாது. அதுதான் உன்மை. (iபிளின் படி பழைய ஏற்பாட்டுச் சட்டங்கள் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்பது பற்றிய ஆய்வுக்கட்டுரை விரைவில் எமது தளத்தில் இன்ஷா அல்லாஹ்)

அடுத்து இந்த சம்பவத்துடன் - திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்ட யூதா தாமாரின் ஆபாசக் கதையை நியாயப்படுத்த முயலும் சில கயவர்கள் பெருமானார் (ஸல்) ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் கொச்சைப் படுத்தி எழுதியிருந்தனர். அவர்களின் அந்த அவதூறுக்கு எமது தளத்தில் மற்றொரு பதிப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம். அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

யூதாவும் தாமாரும் தவறான வழியில் - நியாயத்திற்கு புறம்பாக - செய்த விபச்சாரத்தை நியாயம் கற்பிக்க முயன்ற இந்த கயவர்கூட்டம், முறையாக - நியாயமான காரணங்களுடன் - நடந்த பெருமானாரின் திருமணத்தை கொச்சைப்படுத்த நினைக்கின்றார்கள் என்றால் அவர்களின் எண்ணத்தை புரிந்துக்கொண்டீர்களா? அவர்களைப் பொருத்தவரை பைபிளில் சொல்லப்பட்ட - முறையற்ற - தகாத உறவுக்கதைகளை செயல்வடிவில் காட்டி வரும் மேலை நாட்டினரின் கேடுகெட்ட கலாச்சாரத்தை, இந்த தமிழ் மக்களிடம் திணிப்பதற்கான முயற்சிதான் இது. அதற்காகத்தான் நியாயமான காரணத்துடன் நடந்த பெருமானார் (ஸல்) அவர்களின் திருமணத்தை கொச்சைப்படுத்திவிட்டு - முறையற்று - கேவலமாக நடந்த விபச்சார கதையை நியாயப்படுத்த நினைத்தது. காரணம் அவர்களின் அந்த அசிங்கமான கலாச்சாரத்தை இங்கே இறக்குமதி செய்வதற்கு ஒரே தடை இஸ்லாம் மட்டும் தான். அதனால் தான் இஸ்லாத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்ய பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர்.

'கண்ட கண்ட அசிங்கமான கதைகளை எல்லாம் கடவுள் சொல்லியிருப்பார்' என்று ஒருவன் நம்பினானேயானால் இது போன்ற தவறான முடிவுக்குத் தான் வருவார்கள் என்பது தான் நிதர்சனமான உன்மை. அது தான் இவர்களது வாழ்விலும் நடைபெருகின்றது. இறைவனே நன்கறிந்தவன்.