Thursday, March 18, 2010

ஆடைகளுக்கு குஷ்டரோகம் வருமாம் - பைபிள் கூறுகின்றது

தொழுநோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவராவது நம்புவார்களா? நம்ப முடியுமா? அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.

ஆனால் பைபிள், ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் (?) கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதை கேளுங்கள்:

''47. ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,

(The garment also that the plague of leprosy is in, whether it be a woolen garment, or a linen garment)

48. பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,

49. வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டரோகம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும் அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.

And if the plague be greenish or reddish in the garment, or in the skin, either in the warp, or in the woof, or in any thing of skin; it is a plague of leprosy, and shall be shewed unto the priest:

50. ஆசாரியன் அதைப்பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,

And the priest shall look upon the plague, and shut up it that hath the plague seven days:

51. ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன். வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும்.

52. அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டுமயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன். அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.

53. வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்த தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,

54. அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைத்து,

55. அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன். அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும், அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும். அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும். அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.

56. கழுவப்பட்டபின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.

57. அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம். ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.

58. வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும். அப்பொழுது சுத்தமாயிருக்கும்.

59. ஆட்டு மயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
- லேவியராகமம் 13:47 - 59

இவை அனைத்தும் பைபிளில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்.

குஷ்டரோகமும் அதற்கான பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா? உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்! அதைக்கூட நீங்கள் சோதிக்க முடியாதாம். பக்தர்களிடம் காணிக்கைப் பெற்று வாழ்ந்து வரும் புரோகிதக்கும்பலைச் சேர்ந்த 'ஆசாரியன்' தான் சோதிக்க வேண்டுமாம். இவர்கள் தங்கள் வருமானங்களுக்கா எப்படியெல்லாம் யோசித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்காளா? பாவம் பக்தர்கள்.

கர்த்தரின் பெயரால் சொல்லப்பட்டுள்ள இந்த அபார கண்டுபிடிப்பு கர்த்தரே சொன்னதா? அல்லது கர்த்தரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா? யோசிக்க வேண்டாமா?

விஞ்ஞானம் வளர்ந்த 20ம் நூற்றான்டில் பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா?

சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!

நன்றி - www.egathuvam.blogspot.com

No comments:

Post a Comment